Wednesday, September 5, 2012

3-ன் பெருமை

மூன்று ரேகைள் கொண்டதாக, நாம் நெற்றியில் விபூதி தரிக்கிறோம். அவை பிரம்ம ரேகை, விஷ்ணு ரேகை, மகேஸ்வர ரேகையாகும். * க - என்றால் பிரம்மன், அ - என்றால் சிவன், ம - என்றால் விஷ்ணு. இம்மூவரும் எவரது கண்ணிலிருந்து உதித்தனரோ, அவரே காமாட்சி. * சிவலிங்கத்துக்கு மூன்று பாகங்கள் உண்டு. அவை:- அடிப்பகுதி - பிரம்ம பாகம் (உயிர்) நடுப்பகுதி - விஷ்ணு பாகம் (பெண்) மேல் பகுதி - சிவன் பாகம் (ஆண்) * மூன்று தோஷங்கள் - பிரம்ம ஹத்தி, வீர ஹத்தி, சாயா ஹத்தி. * மூன்று கண்கள் உள்ள தேங்காய், விநாயகருக்கு உகந்தது. * மனிதனுக்கு மூன்று வித சரீரங்கள். அவை:- ஸ்தூல சரீரம் (அன்னமயம்) சூட்சும சரீரம் (பிராணமயம், மனோமயம்) காரண சரீரம் (ஆனந்தமயம்) * அ - உ- ம எனும் மூன்றெழுத்தும் சேர்ந்து பிரணவமான `ஓம்' ஆகிறது. * மூன்று இலைகள் கொண்ட வில்வத்திற்கு `த்ரிதளம்' என்று பெயர். * முக்கண் உடைய சிவனுக்கு `த்ரயம்பகன்' என்றொரு பெயரும் உண்டு. * திரிசூலம் எனப்படுவது, இச்சா, கிரியா, ஞான சக்திகளை குறிப்பிடும். * கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்று சேரும் புனிதமான இடத்திற்கு `திரிவேணி சங்கமம்' என்று பெயர். * முருகன் கையிலுள்ள வேல் (ஞாளம்) மயில் (விந்து) சேவல் (நாதம்)

No comments:

Post a Comment