Wednesday, September 5, 2012
கண்ணன் ஒரு பக்தரின் ( குசேலர்) கால்களை தடவியே கொடுத்துள்ளான்
எல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர். இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர்.
ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார்.
எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன்.
குசேலரின் திருவடியை வணங்கினான். `கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா?' எனக்கேட்டு, "உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே!'' என்று சொல்லி அவற்றை வருடினான்.
கண்ணணின் அன்பைக் கண்ட குசேலர் மெய்மறந்து போனார். இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment