Wednesday, September 5, 2012

சுந்தரகாண்ட பாராயண பலன்

சுந்தரகாண்டத்தில் முதல் அத்தியாயம் படித்தால் முக்தி உண்டாகும். • 2,3 வது அத்தியாயங்கள் படித்தால் பேய், பிசாசு, ஆவிகள் தாக்கம் நீங்கும். மந்தப்புத்தி விலகி புத்தி கூர்மை பெறும். • 7 முதல் 11 அத்தியாயங்கள் வரை படித்தால் அடுத்தவர் மனைவியை கெடுத்த பாவம் நீங்கும். • 15 வது அத்தியாயம் படித்தால் வேலை கிடைக்கும் செல்வம் பெருகும் மகிழ்ச்சி உண்டாகும். • 19-வதுஅத்தியாயம் படித்தால் இனிய வார்த்தை பேசலாம். இறைவனை அடையலாம். • 20 முதல் 21-வது அத்தியாயம் முடிய படித்தால் நல்ல நடத்தைகள் உண்டாகும். • 27-வது அத்தியாயம்படித்து வந்தால் கெட்ட கனவுகள் வராது. • 33 முதல் 40-வது அத்தியாயம் வரை படித்து வந்தால் பிரிந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். • 36-வது அத்தியாயம் படித்தால் வர இருக்கும் ஆபத்து விலகும். இந்த அத்தியாயம் மிக,மிக சக்தி வாய்ந்தது. • 38-வது அத்தியாயம் படித்தால் அறிந்தோ, அறியமாமலே செய்த தெய்வ நிபந்தனை தோஷங்கள் விலகும். • 41-வது அத்தியாயம் படித்து வந்தால் நினைத்தது நடக்கும். • 42-வது அத்தியாயம் முதல் 47-வது சர்க்கம் வரை படித்து வந்தால் எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ளலாம். • 51-வது அத்தியாயம் படித்தால் நீதி, நியாயத்ததுடன் இருந்து தர்ம சிந்தனை பெறலாம். • 54-வது அத்தியாயம் படித்து வந்தால், வீடு, நிலம் போன்ற சொத்துக்களைப் பெறலாம். அபிவிருத்தி உண்டாகும். • 61-வதுஅத்தியாயம் படித்தால் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறலாம். • 67-வது அத்தியாயத்தை படித்தால் நிலைத்த சந்தோஷம் பெற்று இறைவனை அடையலாம்.*

No comments:

Post a Comment