Wednesday, September 5, 2012

பொங்கல் வழிபாடு --ராசி

பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சனிக்கிழமை வருவது மிகவும் விசேஷமானது. சூரியன் நேர் கோர்ட்டில் வரும் உத்ராயணத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடி மகிழ்கிறோம். இந் நாளில் அதிகாலையில் குளித்து பின்னர் வீட்டின் முன்பு பொங்கல் படையல் இட்டு இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபட்டால் ஏராளமான பலன்களை பெறலாம் என்கிறார் பிரபல வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி. அவர் மேலும் கூறியதா வது:- நம் ஊரில் பலர் முறைப்படி பொங்கல் வைத்து வழிபடு வதில்லை. இதனால் யோக பலன்களை தவற விட்டு விடு கிறார்கள். பொங்கல் படையல் முன்பு ஒவ்வொரு ராசிக்காரர்களும், அவர்களுக்கு உகந்த தெய்வங்களை நினைத்து வழிப்பட்டால் சகல யோகங்களையும் பெறலாம். மேஷம்: பொங்கல் படையல் முன்பு முன்னோர்கள் மற்றும் பழனி, திருவாவினன்குடி வேலாயுதசாமியை நினைத்து வழிபட வேண்டும். இதனால் காரிய தடைகள் நீங்கி செல்வ செழிப்பு பெறலாம். வீடு, சொத்து வாங்கும் யோகம் பெறலாம். ரிஷபம்: பொங்கல் படையல் முன்பு ரிஷப ராசிக்காரர்கள் ஸ்ரீரங்கம் மகாலட்சுமியை நினைத்து வழிபடலாம். இதன் மூலம் சொத்து பிரச்சினை நீங்கும். பூர்வீகச் சொத்து திரும்ப கிடைக்கும். கணவன்-மனைவி இடையே தகராறு நீங்கும். மிதுனம்: மிதுனம் ராசி அன்பர்கள் பொங்கல் படையல் முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளி உள்ள சொக்கநாதரை நினைத்து வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப பிரச்சினை நீங்கும். கடகம்: கடக ராசி அன்பர்கள் பொங்கல் படையல் முன்பு திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து வழிபட வேண்டும். இதன் மூலம் காரிய தடைகள் நீங்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். தீராத நோய்களில் இருந்து விடுதலை பெறலாம். சிம்மம்: சிம்மராசி அன்பர்கள் மகாலஷ்மியை மனதில் நினைத்து பொங்கல் படையல் முன்பு வழிபட வேண்டும். இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சொத்து பிரச்சினைகள் தீரும். கன்னி: கன்னி ராசி அன்பர்கள் பொங்கல் படையல் முன்பு புதன் பகவானை மனதில் நினைத்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி மேம்படும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவர் உடல் நலம் தேறும். துலாம்: துலாம் ராசி அன்பர்கள் பொங்கல் படையல் முன்பு பத்மாவதி தாயாரை மனதில் நினைத்து வழிபடலாம். இதனால் வீட்டில் சகல செல்வங்கள் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பெருகும். வியாபாரிகள் லாபம் பெறுவர். எதிரிகள் தொல்லை நீங்கும். விருச்சிகம்: விருச்சிகம் ராசி அன்பர்கள் வைத்தீஸ்வரனை மனதில் நினைத்து வழிபட வேண்டும். இதன் மூலம் தந்தை வழி சொத்தைப் கிடைக்கப் பெறலாம். வியாபாரிகள் லாபம் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். தனுசு: பொங்கல் படையல் முன்பு திருச்செந்தூர் செந்தி லாண்டவரை மனதில் நினைத்து வழிபட வேண்டும். இதனால் ராகு-கேது தோஷம் நீங்கும். குடும்ப பிரச்சினை தீரும். வியாபாரிகள் தொழிலில் அதிக லாபம் பெறுவர். நோய்களில் இருந்து விடுதலை பெறலாம். மகரம்: மகரம் ராசி அன் பர்கள் திருவானைக்காவல் ஜம்பு லீஸ்வரரை மனதில் நினைத்து வழிபட்டால் சகல யோகங்கள் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறலாம். வியாபாரிகள் நஷ்டம் நீங்கி செழிப்பை பெறுவர். கும்பம்: கும்பம் ராசி அன்பர்கள் பொங்கல் படையல் முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை மனதில் நினைத்து வழிபட வேண்டும். இதன் மூலம் கடன் தொல்லை நீங்கும். புது வீடு வாங்கும் யோகம் வரும். விவசாயிகள் நல்ல மகசூலை பெறலாம். மீனம்: மீனம் ராசி அன்பர்கள் குரு பகவானை மனதில் நினைத்து வழிபட வேண்டும். இதனால் காரிய தடைகள் நீங்கும். தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர் களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறார் யோகஸ்ரீ மணிபாரதி.

No comments:

Post a Comment