Monday, September 3, 2012

என்னிடமிருந்த குப்பை எல்லாம் போயாச்சு!

பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த போது, குள்ளச்சாமி என்ற மகானுடன் பழகினார். ஒருநாள் கடற்கரையில் அந்த மகான் சென்று கொண்டிருந்தார். பைத்தியம் போல அங்கே கிடந்த பழைய காகிதம், வாழைப்பழத் தோல்களை ஒரு சாக்குப்பையில் நிறைத்துக் கொண்டிருந்தார். பாரதியார் ஓடிப்போய்,""சுவாமி! என்ன இப்படி குப்பை அள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார். ""என்னப்பா! இதைப் போய் சொல்றியே. உன் மனசுல எவ்வளவு குப்பையைச் சுமந்துட்டிருக்கே! அதை எப்போ தூக்கி எறிவே?'' என்று அவரது இதயத்தைச் சுட்டிக்காட்டினார் குள்ளச்சாமி. பின்னர் குள்ளச்சாமி சாக்குப்பையை தூக்கி எறிந்தபடி பாரதியாரிடம், ""என்னிடமிருந்த குப்பை எல்லாம் போயாச்சு! நீ எப்போ எறியப்போறே?'' என்று கேட்டார். குள்ளச்சாமியின் வார்த்தையைக் கேட்ட பாரதியார் தன் குணநலம் பற்றியும், அதில் எது எதை அகற்ற வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்கத் தொடங்கி விட்டார்.

No comments:

Post a Comment