Tuesday, September 4, 2012
குழந்தை பாக்கியம் வேண்டுமா?
குழந்தை பாக்கியம் வேண்டுமா?
ஆதரவற்ற இல்லத்தில் உள்ள ஏதாவது ஒரு குழந்தைக்கு தேவையான எல்லா உதவிகளையும் ஓசையின்றி செய்து வாருங்கள், அந்த குழந்தைக்கு தேவையான உடை, உணவுக்கு பணத்தை தானம் செய்யுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு புத்திர பாக்கியம் தருவார்.
பால் தானம்......
தொழிலில் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளுக்கு உடனே வெற்றி கிடைக்க வேண்டுமா? ஏலக்காய், பனங்கல்கண்டு கலந்த பாலை அம்மனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு வினியோகம் செய்து விடுங்கள். அப்புறம் பாருங்கள், தடைகள் எல்லாம் தக்ர்ந்து ஓடிவிடும்.
மிளகு சாதம்........
உங்கள் வேலையிலும், முயற்சிகளிலும் அடிக்கடி தடை ஏற்படுவதாக நினைக்கிறீர்களாப அஷ்டமி திதி நாளில் மிளகு சேர்த்த உணவை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
சுப காரியம் நடைபெற........
வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வேண்டுமாப அதற்கு மருதாணியை தானம் செய்யுங்கள் மருதாணி என்பது மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த மான ஒன்றாகும். அதை தானம் செய்தால் மகாலட்சுமி மனம் குளிர்ந்து வீட்டில் சுப காரியம் நடக்க உதவுவாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment