Wednesday, September 5, 2012

நவராத்திரி கன்னி பூஜை பலன்கள்

நவராத்திரி ஒவ்வொரு நாளும் கன்னிகையர்களை பூஜிக்க வேண்டும். இரு வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட கன்னியர்களே இந்தப் பூஜைக்கு உரியவர். இக்கன்னியர்களுக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, ஸாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்று பெயர் சூட்டி ஸ்ரீரஸ்து, ஸ்ரீயுக்தம் என்ற சொற்களை முதலாகக் கொண்ட மந்திரங்களைக் கூறி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு கன்னி பூஜைக்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைக்கும். 1. குமாரியைப் பூஜிப்பதால் வறுமை நீங்கும். பகை விலகும். ஆயுள் விருத்தியாகும். செல்வச் செழிப்பு உருவாகும். 2. திரிமூர்த்தியைப் பூஜிப்பதால் தன, தானிய விருத்தி, தர்ம சிந்தனை விருத்தி, புத்திரா புத்திரி விருத்தி ஏற்படும். 3. கல்யாணியைப் பூஜிப்பதால் கல்வியில் வெற்றி, அரச போகம் கிட்டும். 4. ரோகிணியைப் பூஜிப்பதால் வியாதிகள் தீரும். 5. காளியைப் பூஜிப்பதால் பகை தீரும். 6. சண்டிகையைப் பூஜிப்பதால் செல்வம் சேரும். 7. சாம்பவியைப் பூஜிப்பதால் வெற்றி கிட்டும், வறுமை அகலும், ராஜ சம்போகம் கிட்டும். 8. துர்க்கையைப் பூஜிப்பதால் பகைவர் அழிவர். செய்ய முடியாத காரியங்கள் செய்யக் கூடியதாக மாறும். 9. சுபத்திரையைப் பூஜிப்பதால் மங்களம் உண்டாகும். மன நிம்மதி கிட்டும். லட்சியம் நிறைவேறும்.

No comments:

Post a Comment