Tuesday, September 11, 2012

குழந்தை பாக்கியம் வேண்டுமா?

விஞ்ஞான வளர்ச்சி, சமூக மாற்றங்களால் ஏற்பட்டுள்ள விளைவுகளால் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து போய் விட்டது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் 100க்கு 40 சதவீத தம்பதிகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்களாக உள்ளனர். எத்தனையோ மருத்துவர்களை பார்த்தும், பல கோவில்களில் வழிபாடு செய்தும் பெரும்பாலான குழந்தை இல்லாத தம்பதிகள் சலித்து போய் இருப்பார்கள். அத்தகைய தம்பதிகள் ஒரு தடவை புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை நம்பிக்கையுடன் வழிபட்டு, பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும். இதற்கு 9 வார வழிபாட்டு முறையை பின்பற்றுகிறார்கள். அந்த 9 வார வழிபாடு முறை வருமாறு:- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். முதலில் அரச மரத்து விநாயகரை வணங்கி விட்டு பின்னர் கோவில் பிரகாரத்தை 11 தடவை சுற்றி வந்து வழிபட வேண்டும். பின்னர் அங்காள பரமேசுவரி கர்ப்ப நிலையில் மல்லாந்து படுத்து கிடந்து அருள் பாலிக்கும் சன்னதியை சுற்றி வந்து வணங்க வேண்டும். அப்படி வரும்போதே கருவறையையும் வழி பட்டு விடலாம். அங்காளம்மனை சுற்றி வந்ததும், அவள் காலடியில் முட்டிப் போட்டு மணம் உருக வணங்க வேண்டும். அப்போது கோவில் பூசாரி அம்மன் பாதத்தில் வைத்து எலுமிச்சம் கனியை உருட்டி விடுவார். அந்த கனியை முட்டி போட்ட நிலையிலேயே சேலை முந்தானையை விரித்துப் பிடித்து கீழே நழுவி விடாதபடி பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம் கனியுடன் பூசாரி சிறிது வேப்ப இலையையும் தருவார். அதையும் பெற்றுக் கொண்டு வெளியில் வர வேண்டும். மகா மண்டபத்தில் அமர்ந்து எலுமிச்சம் கனியையும் வேப்ப இலையையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி 9 வாரம் சாப்பிட்டு வர நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் சில விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் வாரம் எந்த கிழமையில் சென்று வழிபாடு செய்கிறீர்களோ... அதே கிழமைகளில் வழிபாடு செய்ய வேண்டும். முதல் வாரம் மட்டும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர் தன் சேலை முந்தானையை சற்று கிழித்து எடுத்து நாகாத் தம்மன் புற்று கோவிலில் உள்ள வேப்ப மரத்தில் தொட்டிலில் கட்டி தொங்க விட வேண்டும். இந்த தொட்டில் வழிபாட்டை முதல் வாரம் மட்டும் செய்தால் போதுமானது. 9 வாரங்கள் இப்படி கனி சாப்பிட்ட தம்பதிகளில் 80 சதவீதம் பேர் குழந்தை பாக்கியம் பெற்று, மீண்டும் மீண்டும் புட்லூர் அங்காள பரமேசுவரியை தேடி, நாடி வந்து வணங்கி விட்டு செல்கிறார்கள். புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் அருளால் புத்திர பாக்கியத்தை சுமக்கும் பெண்களில் கணிச மானவர்கள் இரட்டை குழந்தைகளை பெற்றெடுப்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் புரியாத புதிராக கூட உள்ளது. திருமணமாகி நீண்ட நாட்கள், குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் தம்பதிகள், தன்னை நாடி வந்து விட்டால் ஒரு குழந்தைக்கு பதில் இரண்டு குழந்தையாக கொடுத்து தன் பக்தர்களை அங்காள பரமேசுவரி அகம் குளிர செய்கிறாள் என்று பேசப்படுகிறது.

3 comments: