Wednesday, September 5, 2012
ஆதித்ய இருதயம்
வால்மீகி ராமாயணத்தில், அகத்திய முனிவர் இந்த மந்திரத்தை ராமனுக்கு உபதேசித்தார் என்று எழுதுகிறார் வால்மீகி. ராம ராவண யுத்தத்தை பார்ப்பதற்காக வந்தவர் அகத்திய முனிவர், ராமனுக்கு வெற்றியின் ரகசியத்தை உபதேசிக்கிறார்.
இது மனச் சோர்வை நீக்கி வெற்றியை கூட்டுவிக்கும் மந்திரமாக கருதப்படுகிறது. உள்ளத்தில் உறுதி, மனத்தில் புதிய சக்தி, தெளிவு, வலிமை, தீய சக்திகளை எதிர்த்து போராடும் திறன் எல்லாம் கிடைக்கும் என்று அகத்தியர் கூறுகிறார்.
வலிமையைப்பற்றி எண்ணினால் வலிமை கூடும் என்ற மனவியல் தத்துவத்தின்படி ஆதித்ய இதயம் ஒரு அற்புதமான மந்திரம், படியுங்கள், பயன் பெறுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment