Wednesday, September 5, 2012
நெய்தீபம் ஏற்றுவது எதனால்?
கடவுள் இருக்கும் அறையை கருவறை என்று சொல்லுகிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத்துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாக தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம்.
ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால் அந்த ஒளியை கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாக தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடுவதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.
ஒளிவடிவான இறைவனை ஒளி மூலம் நாம் தரிசித்து பக்திப்பூர்வமாக மகிழ்கிறோம். ஞானமே வடிவான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம். இந்த மகத்தான தத்துவத்தை காட்டுவதே கற்பூர தரிசனத்தின் விளக்கமாகும். தற்போது கற்பூரங்களில் ரசாயனம் சேர்ந்து வருவதால் சுத்த நெய் தீபத்தில் கோவில்களில் ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment