Wednesday, September 5, 2012

பூக்களும் பலன்களும்

தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு தெய்வத்துக்கும் பிடித்தமான மலர்களை வைத்து வணங்குகிறோம். அவ்வாறு அந்த மலர்களை வணங்குவதற்கு பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம். செவ்வந்தி- குருகிரகப் பீடை நீங்கும். சிவப்பு அரளி- குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். நீலச்சங்கு மலர்- சனி பகவானின் அருள் கிடைக்கும். வெண்தாமரை- நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தித் தரும். செந்தாமரை- செல்வம், ஆயுள் மற்றும் சூரிய பகவானின் அருள் கிடைக்கச் செய்யும். பொன்அரளி- பெண்களின் திருமணப் பேச்சுவார்த்தை ஏற்படச் செய்யும். மஞ்சள் அரளி- கடன் தொந்தரவுகளை நீக்கும். ரோஜாப்பூ- உடலுக்கும் உள்ளத்திற்கும் பலத்தை ஏற்படுத்தித் தரும். பாரிஜாதம்- பக்தியையும், அல்லிப்பூ அதிர்ஷ்டத்தையும் வழங்கும். மல்லிகை- கண் பார்வையைக் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment