Tuesday, September 4, 2012

வம்ச விருத்திக்கு செய்ய வேண்டியது

வம்சம் விருத்தி அடைய வேண்டும் என்று விரும்புபவார்கள் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும். இதற்கென மிக எளிய தானங்கள் உள்ளன. நம்மைச்சுற்றியுள்ள உயிரினங்களுக்கு உதவி செய்வதே இந்த தானங்களாகும். உங்கள் வீட்டு ஜன்னல், மொட்டை மாடிகளில் சிறு,சிறு கிண்ணங்களில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கலாம். இந்த தண்ணீர் தானம் மிக, மிக உயர்வானது. அது போல தினமும் வீட்டு வாசலில் அரிசிமாவால் கோலம் போடலாம். துளசி மாடம் முன்பும் அரிசியால் தான் கோலமிட வேண்டும். இந்த அரிசி கோலத்தை எறும்பு மட்டுமின்றி அணில், சிட்டு குருவிகளும் உணவாக பயன்படுத்தி கொள்ளும். இது தானங்களில் மிகப் பெரிய தானமாகக்கருத்தப்படுகிறது. இந்த தானம் தினமும் செய்தல் வேண்டும். இதனால் வம்ச விருத்தி பலன் உண்டாகும். அதோடு பெரிய அளவில் வர உள்ள ஆபத்துக்களையும் இந்த தானங்கள் தவிர்க்க செய்யும் ஆலயங்களில் பசுமாடுகள் வளர்க்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். இந்த பசுமாடுகளுக்கு உணவு அளித்து வந்தால் உங்களது ஏழு தலை முறையும் சுபீட்சமாக வாழும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment