Wednesday, September 5, 2012

வரலட்சுமி விரதம்

சுமங்கலிபெண்கள் வரலட்சுமி விரதத்தின் போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலி பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வர்யங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலட்சுமி பூஜைகளில் கலந்தும் விரதம் அனுஷ்டிக்கலாம். பெரும்பாலான இந்திய நாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இலங்கையில் அனேகமானோர் அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷ பூஜைகளில் பங்கு பெற்று தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர். உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட லட்சுமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து விடும் வீடுகளில் லட்சுமி கடாட்சம் அதிகாலையில் எழுந்ததும் கொல்லைபுற வாசலை திறந்து வைத்து, அதன்பின் தலைவாசலைத் திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவம் விலகி பாக்கியங்களும், பொருளும் சந்தோஷமும், பெருகும். பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே, இரவு உணவு உட்கொள்ள வேண்டும். வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளி பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கு கூட அன்பளிப்பாக கொடுக்க கூடாது. தன் காலத்திற்கு பின்னேர அவர்களுக்கு சேர வேண்டும். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன. 1.தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும். 2.சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும். 3.காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும். 4.வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடக் கூடாது. 5.உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும். 6.தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும். 7.செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். 8.திட்டமிட்டு செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். 9.செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது. 10.லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடைக்கூடாது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்று தான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட (எட்டு) லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும். வீடு தேடிவரும் லட்சுமி ஒரு சமயம் லட்சுமி தேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வீடு, வீடாக சென்றாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தாள். வாசலில் நின்ற லட்சுமியைப் பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையைப் போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது. அதாவது லட்சுமி தேவி எங்கும், எப்பொழுதும் வேண்டுமானாலும் வருவாள். வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள் மனம் உருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லட்சுமி பூஜை, குபேர லட்சுமி பூஜை என்று செய்து லட்சுமியை என்றும் அழைக்கலாம். 11.சுயநலம் அறவே இருக்கக் கூடாது. 12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது. - மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும். எட்டுவித செல்வங்கள் மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதி தேவதையாகும். மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள். அவை வருமாறு:- 1.குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் கொண்ட, கணவன்- மனைவி அமைவார்கள். 2.மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளைப் பெறுவார்கள். 3.அழகு மிளிரும் அணிகலன்களை அடைவார்கள். 4.ருசி மிளிரும் உணவு வகைகள் கிடைக்கும். 5.நலன் தரும் தாம்பூல வகைகள் குறைவில்லாமல் கிடைக்கும். 6.அற்புதமான நறுமணப் பொருள்களைப் பெறுவார்கள். 7.மனத்திற்கு மகிழ்ச்சிïட்டும் இன்னிசை. 8.மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள் கிடைக்கும். இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றது தான் உயர்ந்த வாழ்க்கை. நல்ல கணவர் வேண்டுமா? வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே போல், இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம். அந்த வழிபட்டால் மனதில் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கை. பதினைந்து பேறுகள் லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும் அவை வருமாறு:- 1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும். 2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள். 3. பகை அழிந்து அமைதி உண்டாகும். 4. கல்வி ஞானம் பெருகும். 5.பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும். 6. நிலைத்த செல்வம் அமையும். 7. வறுமை நிலை மாறும். 8. மகான்களின் ஆசி கிடைக்கும். 9. தானிய விருத்தி ஏற்படும். 10. வாக்கு சாதுரியம் உண்டாகும். 11. வம்ச விருத்தி ஏற்படும். 12. உயர் பதவி கிடைக்கும். 13. வாகன வசதிகள் அமையும். 14. ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும். 15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நாரணன் பத்தினியாகிய திருமகளை வழிபட்டு உயர்ந்த தேவ உத்தமர்கள் பலர் அவர்கள் சொன்ன தோத்திரத்தால் மகிழ்ச்சி அடைந்த மகாலட்சுமி பொன்மணியும், பதவிகளும் கிடைக்கச் செய்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. ஸ்ரீ மகாலட்சுமி தேவியை ஐஸ்வர்யத்தின் வடிவாக வழிபட்டவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்கிற எட்டு வாழ்க்கை நலன்களையும் பெற்றார்கள். பாரதியார் தன் பாடலில் "செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்'' என்றார். அந்த எட்டு ஐஸ்வர்யங்கள்:- 1. உயர் பதவி, தன் குறிப்பறிந்து அலுவலலைச் செய்யக் கூடிய நம் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்குத் தலைமை ஏற்கிற பொறுப்புடைய பதவி. 2. மக்கள் பெற்றவர்களுக்கு நல்ல புகழையும் பெயரையும் தேடித் தரக் கூடிய நண்மக்கள். 3. சுற்றம்- தேவைப்படும் சமயத்தில் தேவையான உதவிகளைத் திரும்பவும் செய்ய எதிர்பாராமல் செய்யும் உறவினர். 4. பொன்: நல்ல மார்க்கத்தில் சம்பாதித்து வைத்திருக்கும், நம்மை விட்டு நீங்காத செல்வம். நமக்குச் சமயத்தில் உதவக் கூடியது. 5. மணி: விலை மதிப்பு அதிகம் உடைய மற்றவர்கள் பார்த்து வியக்கும் பொருட்டு அழகான ஆடை அணிகலன்கள் பொன்மணிகள். 6. நெல்: அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்படும் பொன் நிறமான பல்வகை தானியங்கள். 7. வாகனம்: வழியில் தடைகளை ஏற்படுத்தாத விரைவான குதிரை முதல் தற்கால நான்கு சக்கர வாகனங்கள் வரை. 8. ஆட்கள்: நம் மனவிருப்பத்தை அறிந்து தாமே தேவையான வேலைகளைச் சரியான சமயத்தில் குறைவில்லாமல் செய்து முடிக்கக் கூடிய திறன் படைத்த பணி ஆட்கள் வில்வ மரத்திலேயே மகாலட்சுமி குடிகொண் டிருக்கிறாள் வில்வம் மகாலட்சுமியின் விருப்பத்துக்கு உகந்தது மட்டுமின்றி வில்வ மரத்திலேயே மகாலட்சுமி குடிகொண் டிருக்கிறாள் என்ற தகவலும் உண்டு. ஸ்ரீசூக்தத்தில் வில்வத்தின் சிறப்பு பற்றி ஆதித்ய வரணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி ஸ்தவவ்ரு ஷோத வில்வ என்று ஒரு குறிப்பு அமைந்திருக் கிறது. திருவஹிந்திர புரம் என்ற தலத்தில் மகாலட்சுமிக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. லட்சுமிதேவியின் கரத்திலிருந்தே வில்வம் தோன்றியதாக வாமன புராணம் கூறுகின்றது. வில்வத்தினால் பூசித்தால் கொடிய வறுமை ஒழிந்து லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வ வளம் கொழிக்கும் என்ற ஸ்ரீசூக்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதனால் தான் வறுமை, கவலை, மன உளைச்சல் இல்லாமல் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கும் பெண்களை லட்சுமி கடாட்சமாக உள்ளார் என்று சொல்வதுண்டு. பூவுலகில் ஒரு தடவை அவதாரம் செய்த லட்சுமி, மகாவிஷ்ணுவை மீண்டும் அடைவதற்காக வில்வ மரக்காட்டிலே தவமிருந்தாள் என காளிகா புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழக பண்டைய சோதிட சாஸ்திரங்களில் மலர்களின் பலனை கூறும் ஒரு பாடல் வில்வத்தின் பெருமையை கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறது. வில்வனே புனித னாகும் விளம்பு வில்வத்தில் மிக்காம் வில்வமுள் சக்தியாகும் வில்வத்தின் கோடு வேதம் வில்வ வேர் பதினோரு கோடி வியனுத்திரரே யாகும் வில்வமேத்துநர்க்கே தேவர் மெய் வடிவாகு மென்றே அதாவது, புனித இலைகளில் வில்வ இலை சிவசொரூபமாகும். வில்வ மரத்தில் உள்ள முட்கள் சக்தி சொரூபம். கிளைகள் வேதங்களாகும். வில்வ வேர் பதினோரு கோடி ருத்திரங்கள் ஆகும். சாத்தி வழிபட புதிய வில்வம் கிடைக்கவில்லை என்றால் முன்பு சாத்திய வில்வத்தையே மீண்டும் சாத்தலாம். இவ்வாறு ஒரு மாத காலம் வரை மட்டுமே செய்யலாம். சிவபெருமான் திருஉருவமாகவே கொண்டு வில்வத்தை பூசிக்கலாம். ஐந்து வில்வ இலைகளை எடுத்து திசைக்கு ஒன்று என நான்கு திசைகளிலும் நான்கை வைத்து நடுவிலே ஒரு வில்வத்தை வைத்து விட்டால் அது சிவபெருமான் திருவுருவத்தை குறிக்கும். அதனை வழிபட்டாலே சிவபெருமானை வழிபட்டதாக ஆகும். வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை ஆகிய இவை பஞ்ச வில்வமாகும். மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய இந்த நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து எடுக்கக்கூடாது. திருமகளான லட்சுமி பல பெயர்களை கொண்டு துதிக்கப்படுகிறாள். ஹிரண்யவர்ணா - பொன்னிறத்தவள் ஹரிணி - மான் வடிவினள் சந்திரா - மதி போன்றவள் அனபகா முனீம் - நிலை தவறாதவள் ஆர்த்திரா - நீரில் தோன்றியவள் பத்மே ஸ்திதா - தாமரையில் வசிப்பவள் யத்மவர்ணா - தாமரை வண்ணத்தாள் ஆதித்யவர்ணா - சூரியகாந்தி உடையவள் வருஷோபில்வ - கூவளத்தில் தோன்றியவள் கரிக்ஷிணீ - பெருகும் பசுச் செல்வமுடையவள் ஈஸ்வரி - எல்லா உயிரிலும் உறைபவள் புஷ்கரணீ - யானைகளால் வணங்கப்படுகிறவள் பிங்களா - செம்மை நிறம் கொண்டவள் பக்கரிணி - தரும தேவதை சூர்யா - கதிரவனை நிகர்த்தவள் ஹிரண்யமயீ - பொன்னி ஹரிணி - பச்சை மேனியன் (மான் என்று அர்த்தமும் உண்டு) பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும் முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றியிருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள் சேர்த்திருந்தாலும் அவர்கள் இப்பிறவியில்/மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம், பொருட்கள், பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும். இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும். மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற் பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள். பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும். எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது? வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்கு களில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும். மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும். நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம். ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வர வழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று. தாமரையின் பெருமை மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். தெய்வ மலர் என்று தாமரை மலருக்கு ஒரு பெயருண்டு. மகாலட்சுமி மட்டுமன்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும் தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள். தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் உண்டு என்ற கருத்தில் கம்பர் தாமரை மலரை மறை என்ற பெயரால் குறிப்பிடுகிறார். தாமரை மலர் இறைவனை பூசிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை தான். திருமகளின் உருவம் தாமரை மலரை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்ற கருத்தினை தணிகை புராணப் பாடல் தெரிவிக்கிறது. திருமகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட காரணத்தால் தாமரை மலருக்கு தனி மகத்துவம் கிடைத்துள்ளது. வீட்டில் செல்வம் செழிக்க 1. வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. 2. வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது. 3. வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும். 4. வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம். 5. குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம். வரலட்சுமி நோன்பு அன்று அம்பிகை கலசத்தில் எழுந்தருளி இருக்கும் போது திருவிளக்கின் தீபச்சுடர் வடக்கு திசை பார்த்து எரிய வேண்டும். விளக்கின் வடக்கு முகம் மற்றும் கிழக்கு முகம் ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றும் போது சற்று ஈசானயம் பார்த்து தீபசுடர் பிரசுரிக்கும்படி அமைத்து வழிபாடு செய்தால் அனைத்து ஞானமும் கண்டிப்பாக கிடைக்கும். ஏனென்றால் வடகிழக்கில் இருந்து தென்மேற்கு செல்லும் காஸ்மிக் கதிர்கள் தென்மேற்கில் உயர் உயிர் சக்தியாக மாறுகிறது என்பது இன்றைய விஞ்ஞானத்தின் கோட்பாடு. அன்னை வரலட்சுமி வடகிழக்கில் இருந்து தென் மேற்கு பார்த்து தரும் அருள் நமக்கு வேண்டிய அனைத்தையும் தருவதும் கோட்பாடு. நோன்புக்கயிறு வரலட்சுமி தினத்தன்று வலது கையில் நோன்புக்கயிறு கட்டுவது விசேஷமானது. நோன்பு கயிறு 9 நூல்கள் கொண்டது. இதில் அஷ்டலட்சுமிக்கு எட்டு நூல் கயிறு ஆகும். அனைவரையும் ஒருநிலைப்படுத்தும் போது வரம் தரும். வரலட்சுமி அன்னையையும் சேர்த்து கூடுதல் ஒரு கயிறாக ஆக ஒன்பது கயிறு இருக்கும். அதில் மேல் முடிச்சு ஒன்று போட்டு அம்பிகையை எழுந்தருளச் செய்துள்ள கலசத்தில் பக்கத்திற்கு ஒன்றாக விழுதுகள் போல் வைத்து கொள்ள வேண்டும். பூஜையில் கலந்து கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு பிரசாதமாக தர தேவையான அளவு நூல்களை வைத்து பூஜை செய்து சுமங்கலிகள் கழுத்திலும் இளம் நங்கைகள் வலக்கையிலுமாக கட்ட வேண்டும். வலக்கை கணவனின் பாகம் என்பதால் பருவ மங்கைகளுக்கு விரைவில் கணவன் தன் அன்புக்கு கட்டுப்படுவார் என்பது ஐதீகமாகும். 1 1 வரலட்சுமி நோன்பின் பலன்கள் திருமணமானதும் வரும் முதல் வரலட்சுமி நோன்பில் பூஜை செய்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதை வளர்த்து கல்விச்சாலைக்கு அனுப்ப நல்ல கல்வி அறிவு கிடைக்கும். திருமணம் கைகூடும். நல்ல வேலை அமையும் வெளிநாட்டு தொடர்பு வெற்றி தரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் அமையும். தொழிற்சாலைகள் லாபம் தரும். வியாபாரம் அதிகரிக்கும். நோய் அகலும் பலருக்கு வீடு கட்டும் யோகம் அமையும். வீட்டை திருத்தி விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் அமையும். பதவிகள் கிட்டும். வம்பு வழக்குகள் அகலும். குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி கூடும். வருடம் முழுவதும் செல்வம் வீட்டில் குவியும். மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது. பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர். ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம். ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர். இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள். வைகறைக் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கோலம் போடும் பழக்கம் என்பது பண்டுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது. புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.'' லட்சுமி இருக்கும் இடங்கள் ஸ்ரீலட்சுமி திருமாலின் வட்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள். தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள். ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப்பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள். அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும். ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள். வில்வ மரத்தைப் பிரதசிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள். வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம் என்பதனை ஸ்ரீ சுக்தத்தில், ``ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி ஸ்தவ வ்ருஷோதபில்வ'' என்று சொல்லப்பட்டுள்ளது. சூரியனின் வர்ணத்தோடு கூடியவளே! தபஸ்சினாலே உணரப்படுவளே! உன்னுடைய வனஸ்பதி பில்வ விருசமாகும்'' என்பது பொருள். இதேபோல் மற்றொரு சுலோகத்தில், தஸ்யபவானி தபாசானு தந்து மாயாந் தராயாஸ்ச பாக்யா அலட்சுமி என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பழங்கள், மாயையான தடைகளை நீக்கி, அலட்சுமி நிலைக்கு (திருவின்மை) புறம்பானவர்களாக (லட்சுமிகரமாக) ஆக்கும். ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது. வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம். நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ``ஹரி பலம்'' என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள். ஒரு அந்தணன் மகாலட்சுமிக்கு ப்ரீதியான நெல்லி மரத்தடியில் உயிர் நீத்த புண்ணியத்தால் வைகுண்ட பிராப்தியை பெற்றான். இதேபோல் நெல்லிக்கனியை பிசை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டிகளை வர்சித்தவள் மகாலட்சுமி. குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாட்டால் குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பது திருஷ்டாந்தம் துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள். வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்களை வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்களை இரு நாட்களுக்கு முன்பே சேகரிக்கத் தொடங்கி விட வேண்டும். அந்த வகையில் நீங்கள் முன்பே தயார் செய்து கொள்ள வேண்டிய பொருட்கள் வருமாறு:- மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம்-12, தேங்காய்-6, மாவிலை, தோரணம், வாழை கன்று-2, அம்மனுக்கு பஞ்சு மாலை, தாமரை-6, தாழம்பூ-2, உதிரிப்பூ கொஞ்சம், பூமாலை-2, தொடுத்த சரம்-3 முழம், பச்சரிசி - 4 கப், தாம்பளம், அம்மன் முகம், கலச சொம்பு, பஞ்சபாத்திரம் உத்தரணி, பூஜை மணி, கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், பித்தளை கிண்ணங்கள், பித்தளை தட்டுக்கள், ஆரத்தி தட்டு, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், பலகை, மஞ்சள் வண்ண பட்டு துணி, முழு பாக்கு, மஞ்சள் கிழங்கு, வெள்ளி காசுகள், எலுமிச்சை, கருகமணி காதோலை, மஞ்சள் சரடுகள். பூஜைக்கு தேவையான நைவேத்தியங்கள்....... (குறைந்தது ஐந்து முதல் ஒன்பது எண்ணிக்கையில்) பூரண கொழுக்கட்டை, உளுத்தம் கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை, உளுந்து வடை, பச்சரிசி இட்லி, வெல்ல பாயசம், ஒரு ஸ்பூன் பருப்பு, நெய் சேர்த்த அன்னம் (மகா நெய்வேத்தியம்), அப்பம், சர்க்கரை பொங்கல், வடை, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, வசதிக்கு ஏற்றபடி சில பழங்கள். பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலம் போட வேண்டும். சுற்றி செம்மண் பூச வேண்டும். வாசல் படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். நோன்புக்கு முதல் நாள், எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். கிழக்கு திசை நோக்கி பூஜை மண்டபம் அமைக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் மாக்கோலம் போட்டு, கலசம் வைத்து அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளலாம். முதல் நாள் இரவு கலசம் அமைக்க அம்மன் முகத்தையும், விளக்குகள் மற்றும் பூஜை பாத்திரங்களையும் நன்றாக தேய்த்து அலம்பி வைத்துக் கொள்ளுங்கள். அம்மனை அழைக்க வாசல் படியருகில் செம்மண் இட்ட கோலம் போட்டு அதன் மேல் பலகை வைத்து, பலகையில் கோலம் போட்டு மண்டபத்தில் வைத்து, அதன் மேல் தாம்பளத்தை வைத்து, தாம்பாளத்தில் கொஞ்சம் பச்சரிசியை பரத்தி வையுங்கள். கலச சொம்புக்கு சந்தன குங்குமம் இட்டு, பாதிக்கும் மேல் பச்சரிசி நிரப்பி, அதற்குள் இரண்டு வெற்றிலை இரண்டு பாக்கு, இரண்டு மஞ்சள் கிழங்கு, வெள்ளி காசு, ஒரு எலுமிச்சை, கருகமணி காதோலை ஆகியவற்றை இட்டு வையுங்கள். தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து, மாவிலையை கலச சொம்பில் அமைத்து சொம்பின் மேல் குடுமி மேல் பக்கம் இருக்குமாறு தேங்காயை வையுங்கள். அம்மன் முகத்தை அலங்காரம் செய்து கலசத் தேங்காய் மேல் பொருத்துங்கள். அம்மனுக்கு விதவிதமாய் அலங்கார பொருட்கள், நகைகள் ரெடிமேடாக கிடைக்கின்றன. அவரவர் ஆசைக்கும் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். மஞ்சள் பட்டுத் துணி சுற்றி வையுங்கள். இந்த சொம்பை அரிசி பரத்திய தாம்பாளத்தின் மேல் வைக்க வேண்டும். தாமரை, பூமாலை, தாழம்பூவையும் அம்மனுக்கு இருபுறமும் சாற்றி வைக்க வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். இது வாசல் படி அருகில் அமைத்திருக்க வேண்டும். அன்றிரவு வெண் பொங்கல், சாம்பார் மற்றும் பாயசம் சமைத்து நெய்வேத்தியம் செய்து உண்ண வேண்டும். மறுநாள் காலை (விரதத்தன்று) எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். வரலட்சுமி பூஜை முறை திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும். எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம். கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யவேண்டும். இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர். ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம் புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் "நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்'' என்பது சான்றோர் வாக்கு! கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம். இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம். அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான் அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு கதை. போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது. அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான். ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான். அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம். நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள். சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான். மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவன் யாரிடமும் எவ்வரமும் கேட்கவில்லை. ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லஷ்மி வந்தாள். அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜன். பக்தன் கேட்ட வரத்தின்படி தைரியலட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள். மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக்கொண்டு பூஜைக்கு போனான். அங்கு பூஜாக்கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான். நீங்கள் ஏழு பேரும் நேற்று போய்விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன். எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது. நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக் கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள். 16 வகை லட்சுமி 1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். 2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம். 3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம். 4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும். 5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம். 6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு. 7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம். 8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள். 9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள். 10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம். 11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும். 12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம். 13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும். 14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும். 15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள். 16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும். செல்வம் தரும் சிறந்த ஹோமம் ஹோமங்கள் பல்வேறு நன்மைகளை வேண்டி நடத்தப்படுகிறது. ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன. தற்போது எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப ஹோமம் செய்யப்படுகிறது. ஆயுள் பெற, பித்ருக்கள் ஆசி பெற என்று பலவகை ஹோமங்கள் உள்ளது. அந்த வகையில் செல்வம் பெறவும் ஹோமம் இருக்கிறது. அந்த வகை ஹோமத்துக்கு தானகர்ஷன ஹோமம் என்று பெயர். செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தனாகர்ஷண ஹோமம் ஆகும். வடநாட்டில் தனலட்சுமி பூஜை தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படுகிறது. தாம் சேர்த்த பொருளையெல்லாம் வட நாட்டவர்கள் பூஜையில் வைத்து வழிபடுவர். ஸ்ரீரங்கத்தில் தீபாவளியன்று `ஜாலி அலங்காரம்' என கொண்டாடப்படுகிறது. தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் இந்த ஹோமத்தைச் செய்யலாம். இதனால் தொழில், வியாபார, வேலை இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும் செல்வமும் பெருகும். தனம் சேர்வது தானம் செய்ய, தானம் செய்வது தர்மம் தலைகாக்க. மற்ற அருளைவிட லட்சுமியின் அருள் ஒன்றே தலைசிறந்தது. அதை பெற்றுத் தர வழி வகுக்கும் ஹோமம் இதுவாகும். விடியற்காலையில் குளித்து, சுத்தமான துணி உடுத்தி, திலகமிட்டுக் கொண்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். சங்கல்பம் செய்து கொள்ளவும், பிறகு நம் செல்வத்தை யெல்லாம் ஒர குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்யவும். வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும், தேவதா ஆஜ்யபாகம், சமீதா தானம் செய்யவும். பிறகு சுத்தமான பசுநெய், தாமரைப்பூ, தங்கக்காசு, சர்க்கரைப் பொங்கல் மூலம் 108 ஆவர்த்தி `ஹிரண்யவர்ணா...' என்ற வேத மந்திரம் மூலம் ஹோமம் செய்யவும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யவும். சொக்கத் தங்ம், பட்டு முதலியற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹுதி செய்து ஹோமம் முடிக்கவும். கற்கண்டு பாலுடன் செய்த பொங்கல் நைவேத்யம் செய்து மங்கள ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும். மலையாள தேசத்தில் தங்கத்தை உருக்கி நெய்போல் விட்டு இந்த ஹோமம் செய்தார்களாம். சுவர்ணலட்சுமி குடத்தை எடுத்துக் கொண்டு பிரசாதம் எடுத்துக் கொள்ளவும். இதனால் வீட்டில் லட்சுமி குடி புகுந்து செல்வச் செழிப்பு தருவாள் என்கிறது வேதம். இந்த ஹோமத்தினால் நிச்சயமாக இரண்டு உலகச் செல்வங்களான பொருளையும், அருளையும் பெறலாம்.

No comments:

Post a Comment