Wednesday, October 3, 2012

குறிக்கோளை எட்ட முயற்சிக்கும் போது நெருப்பாற்றில் நீந்த வேண்டியிருக்கும்.

வெள்ளையர்கள் கருப்பர்களை நிறபேதம் காட்டி அடிமைப்படுத்திய காலம். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் அகிம்சை வழியில் போராட முடிவெடுத்தார். கருப்பர்களுக்கு சகல உரிமையும் பெற்றுத்தருவதே அவரது குறிக்கோளாயிற்று. ""எனக்கு நான்கு குழந்தைகள். அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தங்களது தோலின் நிறத்தால் அல்லாமல், சிறப்பியல்புகளாலும், பண்புகளாலும் மதிக்கப்படுபவர்களாக மாற வேண்டும்,'' என்று அறைகூவல் விடுத்தார். இந்த வார்த்தைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. அவரவரும் தங்கள் குழந்தைகளும் அவ்வாறே ஆக வேண்டுமென போராட்டக்களத்துக்கு வந்தார்கள். ஆனால் சும்மா கிடைத்து விடுமா சுதந்திரம்? மார்ட்டின் லூதர்கிங்கை வெள்ளைத் தீவிரவாதிகள் தாக்கினர். அவரது குடும்பத்தைக் கொலை செய்யும் நோக்கில் வீட்டில் வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், எல்லாவற்றையும் சமாளித்தார் கிங். இறுதியாக, எல்லா மாநிலங்களும் வெள்ளையருக்கு சமமான உரிமையை கருப்பு இனத்தவர்களுக்கும் அனுமதித்தன. அது மட்டுமல்ல! அமைதிக்கான நோபல் பரிசும் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு கிடைத்தது. குறிக்கோளை எட்ட முயற்சிக்கும் போது நெருப்பாற்றில் நீந்த வேண்டியிருக்கும். அதைக் கடந்து விட்டால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment