Wednesday, October 3, 2012

நல்ல பெயர் வாங்குங்க! விரும்புகிறார் காஞ்சிப்பெரியவர்

கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால், அந்தப் பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம்! வாழ்வில் முன்னுக்கு வரவே முடியாது. நல்லபிள்ளையாவது கடினம் என்று தோன்றலாம். கடவுளின் அருளைத் துணை கொண்டால் எளிதாகச் சாதித்து விடலாம். நல்லவன் என்று பெயர் வாங்கி விட்டால் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் கெட்டவன் தண்டனை அடையத் தான் செய்வான். ஸ்வாமியின் பாத கமலங்களை விடாமல் பிடித்துக் கொண்டு, ""எனக்கு வேறு கதியில்லை; நீ தான் நல்ல வழி காட்டவேண்டும்'' என்று வேண்டிக் கொள்ள வேண்டும். உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு ஸ்வாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத்தூய்மையை இளம்வயதிலேயே பெறுவது தான் நல்லது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப்போக விட்டால் நல்லவழி தேட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைப்பதோடு, ஒரு குறைவும் வராமல் ஸ்வாமி காப்பாற்றுவார்.

No comments:

Post a Comment