Thursday, November 29, 2012

குருநானக் விரும்புகிறார்

மனம் என்னும் நிலத்தைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். அதில் இறைவனின் திருநாமம் என்னும் விதையைத் தூவுங்கள்.
* பணக்காரர்களிடம் தர்மசிந்தனையும், இரக்கமும் இருக்க வேண்டும். அது குறையத் தொடங்கினால், அவனை அழிக்க கடவுள்
முடிவெடுத்து விட்டார் என்று பொருள்.
* நன்மை செய்தவருக்கு திரும்ப நன்மை செய்வது உலக வழக்கம். ஆனால் தீமை செய்த பாவிக்கும் நன்மை செய்வது உத்தமர்களின் குணம்.
* குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலரில் தண்ணீர் ஒட்டாதது போல, இந்த உலகத்தின் மீது பற்றின்றி இருக்கப் பழகுங்கள்.
* பொறாமை நிறைந்தவன், பொய் பேசுபவன், பிறர் செல்வத்தை அபகரிப்பவன் ஆகிய தீயபண்பு நிறைந்தவன் அறிஞனாக இருந்தாலும் நரக தண்டனையை அடைவான்.
* மனிதனது இதயத்தில் இருந்து வழிநடத்துபவன் இறைவன். உலகம் அவருக்கு உரிமையானது. கடவுளுடைய காலடியில் சரணடைந்து விடுவதே அவருக்குச் செலுத்தும் காணிக்கை.
* பக்தி முழுமையானதாக இருந்தால் மட்டுமே பணத்தின் மீதுள்ள ஆசையில் இருந்து நம்மால் விடுபட முடியும்.
* உண்மையும், அன்பும் ஆன்மிக வாழ்வின் அடிப்படை விஷயங்கள். இவை தவிர மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரம் தான்.
* நான் என்ற ஆணவமும், எனது என்ற ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் கடவுளிடம் நெருங்க முடியாது.
* பொறுமையை விட சிறந்த தவம் கிடையாது. திருப்தியைத் தவிர உயர்ந்த இன்பம் உலகில் வேறில்லை.
* சத்தியம் நிரந்தரமானது. முதலோ, முடிவோ கிடையாது. தன் நிலையில் இருந்து எப்போதும் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
* நீதி தவறாத வகையில் பணத்தைச் சம்பாதியுங்கள். நாலு பேருக்காவது தானம் செய்யுங்கள்.
* மனத்தூய்மை பெற கடும் முயற்சி தேவை. தூய்மை பெற்ற பின்பே கடவுள் வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.
* வாய்மை என்னும் வாசனை திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்களின் முகம் பிரகாசத்துடன் விளங்கும்.
* அழகு, பெருமை, இளமை, செல்வம் போன்ற விஷயங்கள் திருடர்களைப் போல நம்மிடம் இருக்கும் ஞானத்தை அபகரித்து விடும்.
* விடியற்காலைப் பொழுது மகத்துவம் மிக்கது. ஜபம், தியானம், வழிபாடு ஆகியவை செய்ய ஏற்ற வேளையாகும்.
* ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவன் பக்திக்கு தகுதியில்லாதவன். யுகம் யுகமாய் ஆய்வு செய்தாலும் அவனுக்கு ஆன்மிகம் வாய்க்காது.
* சாந்தம் என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். வெறும் உதட்டளவில் இருக்கும் மவுனம் உள்ளத்தில் அமைதியை உண்டாக்கப் போவதில்லை.
* உலகத்தில் உள்ள செல்வம் அனைத்தையும் செலவழித்தாலும் திருப்தியை ஒருவரால் விலைக்கு வாங்க முடியாது.
* மன்னிப்பதைக் காட்டிலும் மகத்தான ஆயுதம் வேறொன்று உலகில் கிடையாது.

No comments:

Post a Comment