Thursday, November 29, 2012

உடல் நன்றாக இருக்கும்போதே, நாராயணனைச் சரணாகதி அடைய வேண்டும்

உடம்பும் ஒருவீடு தான். மாமிசம், ரத்தத்தினால் ஆன சுவர்களை, எலும்பு என்னும் தூண்கள் தாங்கி நிற்கின்றன. முடி, ரோமம் என்னும் கூரையினால் இந்த வீடு வேயப்பட்டிருக்கிறது. சாதாரண வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி தலைவாசல், கொல்லைப்புறம் என்று இரு வாசல்களை வைப்பர். ஆனால், உடலுக்கோ ஒன்பது வாசல். கடவுள் இந்த வீட்டிற்குள், உயிர் என்னும் ஜீவாத்மாவைக் குடி வைத்ததோடு, தானும் உடன் தங்கியிருக்கிறார். ஆனால், மனிதன் வீடு கட்டிக் கொடுத்த அவரை மறந்துவிட்டு, வீடு மட்டும் தனக்குச் சொந்தமானது என்று நன்றி இல்லாமல் வாழ்கிறான். உடல் நன்றாக இருக்கும்போதே, நாராயணனைச் சரணாகதி அடைய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகிறார் திருமங்கையாழ்வார். ""ஒருவனுக்கு வயதாகி விட்டால் பேச்சு போய் விடும். தளர்ச்சியால் பெருமூச்சு வாங்கும். கண்கள் பஞ்சாகி விடும். ஸ்ரீரங்கத்தில் துயிலும் ரங்கா! இப்போதே உன்னருள் கிடைக்க இரக்கம் காட்டமாட்டாயா!'' என்று பிள்ளைப்பெருமாள் அய்யங்காரும் உலகவாழ்வின் நிலையாமையைச் சொல்லி ரங்கநாதரை உதவிக்கு அழைக்கிறார்.

No comments:

Post a Comment