Friday, December 21, 2012

* வீட்டில் சிவலிங்கம் இருந்தால் நந்தி சிலை வைக்க வேண்டுமா?

 * வீட்டில் சிவலிங்கம் இருந்தால் நந்தி சிலை வைக்க வேண்டுமா?

தேவையில்லை. சமயத்தில் உங்களிடம் கோபித்துக் கொண்டு நந்தி மீது ஏறி சென்றாலும் சென்று விடுவார். ஏராளமான சுவாமி விக்ரஹங்களை வைத்துக் கொண்டு சரிவர பூஜை செய்ய முடியாமல் கஷ்டப்பட வேண்டாமே என்பதையே விளையாட்டாகச் சொன்னேன். வாழ்த்துக்கள்.

நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை என்பது உண்மைதானா?
.
நலிந்தோர் என்றால் ஏழைகள் அல்ல. திடீரென ஒரு பிரச்னை ஏற்பட்டு உடனடியாக நிவாரணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்களையே நலிந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் நாளும் கோளும் பார்க்க வேண்டியதில்லை.


.

No comments:

Post a Comment