Thursday, January 31, 2013

செவ்வாய் தோஷத்தை விரட்ட

செவ்வாய் தோஷத்தை விரட்ட, போலியாக ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறு, குளம், கடல், கிணறு, ஏரி போன்றவற்றின் அருகில் ஒரு புரோகிதரைக் கொண்டு இந்த திருமணத்தை நடத்த வேண்டும்.

ஒரு வாழைக்கன்று, தர்ப்பைபுல், நவதான்யம், மஞ்சள் குங்குமம், பாக்கு வெற்றிலை, பூ-பழம்- தாலிக்கயிறு, இரு மாலைகள் இவற்றைக்கொண்டு உண்மையில் திருமணம் செய்விப்பது போல் திருமணம் செய்விக்க வேண்டும். தாலியை பல பேரிடம் ஆசி வாங்கி வாழை மரத்திற்குக் கட்ட வேண்டும்.

வாழை மரத்திற்கு மாலை அணிவித்து மூன்று முறை மாலை மாற்றிக்கொண்டு பிறகு நவதான்யம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பிறகு 5 நிமிடம் கழித்து ஒரு அரிவாளால் மணமகளைக் கொண்டு அவ்வாழைக் கன்றை எட்டு துண்டுகளாக வெட்டி நீர்நிலையில் எறிந்துவிட வேண்டும்.

இப்படி செய்யும் நாள் ஒரு திருமண நாளாக (சுபமுகூர்த்தம்) இருக்க வேண்டும். மணமகளாக இருப்பின் நாத்தனார் முறை உள்ளவர்கள் மூலம் தாலிகட்டிக்கொள்ள வேண்டும். வேறு ஆண்மகன் அல்லது நாத்தனார் முறை உள்ளவர்கள் மூலம் மூன்று துண்டுகளாக வெட்டச்செய்து நீர்நிலையில் எறிந்துவிட வேண்டும்.

பின்னர் அப்பெண்ணின் தாலியை எடுத்து விட்டு வந்துவிடவும். ஆண் மகனாயின் நல்லெண்ணெய் விட்டு குளித்து விட்டுவர வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் கூடும். சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் செவ்வாய் பகவானைத் தரிசித்து வைத்தீஸ்வரனுக்கு உப்பு வாங்கிப் போடவும்.

விரைவில் திருமணம் கூடிவரும். அருகில் உள்ள ஈஸ்ëவரன் கோவிலில் இருக்கும் நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு இளம் சிவப்பு நிற துணியை அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வரவேண்டும். இவ்வாறு 9 செவ்வாய்க்கிழமைகளில் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment