Thursday, February 7, 2013

12 வகை விரதங்கள்

12 வகை விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவை முறையே.....

* யாசிதம் இரு பகல் உணவு கொள்பவர்கள் இவ்விரதத்தை இருப்பர்.

* இந்த வகை பாதக்கிரிச்சனம். இவ்விரதம் இருப்போர் நல்லுணர்வு கொண்டிருப்பவர்.

* இவ்வகை விரதம் பன்னகிரிச்சனம் எனப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் வில்வ மரம், அரச மரம், அத்திமரம் ஆகியவற்றின் தளிர் இலைகளை மட்டுமே தண்ணீரில் நனைத்து உண்பர்.

* ஹெளமிய கிரிச்சனம் என்று அழைப்பர். இவ்விரதத்தை இருப்பவர்கள் பகலில் மட்டும் உண்பார்கள். பால், மோர், நீர், பொரி மாவு இவற்றில் ஒன்றை உண்பர்.

* இதற்கு அதிகிரிச்சனம் எனப் பெயருண்டு. இவ்வகையான விரதத்தை இருப்பவர்கள் 3 நாள் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டோ, உண்ணாமலோ இருப்பது.

* கிரிச்சனாதி கிரிச்சனம் என்ற பெயர் ஆகும். 21 நாள் பால் மட்டுமே அருந்தி, கிரிச்சனாதி கிரிச்சனம் விரதம் இருப்பர்.

* கிரசா பத்தியகிரிச்சனம். 3 நாள் காலை 3 நாள் இரவு, 3 நாள் நடுப்பகல், 3 நாள் முழுமையும் உணவின்றி இருப்பது.

* பார்ககிரிச்சனம் என அழைப்பர். 12 நாட்கள் உணவின்றி இவ்விரதத்தை இருப்பார்கள்.

* சாந்தபன கிரிச்சனம் எனப்படும். ஒரு நாள் போசனம். ஒரு நாள் கோமியம், ஒரு நாள் பால், ஒரு நாள் தருப்பை நீர் மட்டுமே அருந்தி, ஒரு நாள் ஊண், உணவு எதுவும் இல்லாமல் இருப்பது.

* மகசாந்தாவன கிரிச்சனம் என்பர். 9-வது விரதத்தில் கூறியவற்றில் ஒன்றை மட்டும் உண்டு இருப்பது.

* சாந்திராயன விரதம் எனக்கூறப்படும். வலது கையில் தொடங்கி ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கொண்டே வந்து தேய்பிறை முதல் ஒவ்வொரு பிடி அன்னம் கூட்டிக் கொண்டே செல்லுதல். 3 வேளையும் குளிக்க வேண்டும்.

* வாலசாந்திராயணம். சாந்திராயணத்தின் அன்று இரவில் 4 பிடி அன்னம் மட்டும் உண்பது.

No comments:

Post a Comment