Thursday, February 7, 2013

பிறருக்கு துன்பம் இழைக்க கனவிலும் நினைக்காதீர்

கபிலபுரத்தில், சங்கமன் என்ற வியாபாரி வசித்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி. கணவன் சொல் தட்டாத பதிவிரதை.
அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சங்கமன் அங்கு வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி வியாபாரியான பரதன் பார்த்தான். அரசரிடம் சென்று, ""சங்கமன் என்ற ஒற்றன் கபிலபுரத்திலிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள்,'' என்றான்.
அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான். நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். ""நீதி தவறி யார் எனக்கு துன்பம் செய்தார்களோ, அவர்கள் அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக!' 'என சாபமிட்டு இறந்து போனாள்.
மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்கு காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி கோப்பெருந்தேவியாகவும் பிறந்து உயிர் விட்டனர்.
இனிமேலாவது, பிறருக்கு துன்பம் இழைக்க கனவிலும் நினைக்காதீர்

No comments:

Post a Comment