Wednesday, February 6, 2013

நான் பிராமணன் என்று அநேகமாக அனைவருக்கும் ஏதோ ஒரு தயக்கம்.


நான் பிராமணன் என்று அநேகமாக அனைவருக்கும் ஏதோ ஒரு தயக்கம். மிகவும் மெதுவாக காதில் விழுந்தும் விழாத மாதிரியான குரலில் கூறும் பழக்கம் ஏன் நம்மிடம் வந்தது? ஒரு விதமான கூச்சம் ஏன் பற்றிக்கொள்கிறது. காரணம் நாம் பிராமணர்களாய் வாழ்கிறோமா? அந்தணர் என்று அடித்துக் கூறும்படி அந்தத் தகுதியை நாம் பெற்றுள்ளோமா? என்ற சந்தேகம் நமது ஆழ்மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. “பிராமணன்” என்கிற உயர்வை உணர வேணுமானால், மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒரு விதத்தில் மாறுபட்டு, பளிச்சென்று தெரியும்படி குறை விலாசங்களை வளர்த்துக்கொண்டுள்ளோமா? என்றால் இல்லை என்று கூறும்படிதான் நாம் வாழ்கிறோம்.

நாம் முதலில் தெரிவித்தது, பொதுநல மனப்பான்மை, சுயநலம், நான் என் மனைவி மக்கள் குடும்பம் என்று குறுகிய சிந்தனைகளை உரமிட்டு வளர்த்துவிட்டோம். நாம் பரோப காரியாக, லோகஷேமத்தை முதலில் மனதில் நிறுத்தி வாழ்ந்த அந்த உத்தம குணங்களைத் தெரிவித்துவிட்டோம். இதுதான் நம்மை நமது உயர்நிலையிலிருந்து கீழே தள்ளிய முதல் காரணமாக நான் கருதுகிறேன். அடுத்ததாக பிராமணர் பொய் கூறமாட்டார். காயத்ரி ஜபிக்கும் நாக்கு பொய் சொல்லாது என்ற அந்த நம்பிக்கையை நாம் குலைத்துவிட்டோம். “காயத்ரி ஜபித்தால்தானே சத்யவாதியாக இருக்கணும் எதற்கு வீண் கஷ்டம்” என்று ஜபிப்பதையே விட்டுவிட்டோம்.

நம்மவர்கள் எத்தனை கோபம் வந்திடினும், இறைவனின் நாமத்தைக் குரல் ஏற்ற இறக்கத்துடன் கூறி, தனது கோபத்தை தெரிவிப்பது வழக்கமாக இருந்தது. ‘வசவு’ என்பது நம் அஹங்களில் மிகவும் கண்டிக்கப்பட்ட விஷயம் ‘வசை’ பாடாதே, போனாப் போறது போ... என்று தணிந்து செல்லக் கற்றுக் கொடுக்கப்பட்டது. மற்ற இனத்தவர்களின் வாயில் விழுந்து புரளும் சரளமான, காதைச் சுடும் வசவுகள் நம்மிடையே இருந்ததில்லை. ஆனால் இன்று நம்மவர்கள் வண்டி ஓட்டும்போது, சாலையில் தவறாகச் செல்லும் ஓட்டுனர்களை வசை பாடும் விதத்திலிருந்து அலுவலகம், வீடு என்று பல இடங்களிலும் கூச்சமின்றி வசைகள் வருகின்றன. நாவடக்கம் நம்மைவிட்டுச் செல்ல விட்டுவிட்டோம். வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். தவறான வார்த்தைகள் நம்மவர்களின் மரியாதையை இன்னும் ஒரு அடி அதிகமாகப் புதைத்துவிட்டது என்பது என் கருத்து.

அடுத்தபடியாக - பிராமணர்கள் வெளி இடத்தில் எதுவும் உண்ணமாட்டார்கள். மடி, ஆச்சாரமாய் இருப்பவர்கள் என்னும் எண்ணத்தை மாற்றிவிட்டோம். தற்காலத்தில் மிகவும் அதிகமாக வெளியில் சாப்பிடுவர்கள் நாம்தான்! பிராமணர்கள் மிகவும் ஜீவகாருண்ய முள்ளவர்கள். ஈ எறும்புக்குக்கூடத் துன்பம் நினைக்காதவர்கள் என்னும் எண்ணத்திலும் மண்ணை அள்ளிப் போட்ட பிராமணர்கள் ஏகம்! மிகவும் நாகரிகமாக நாங்கள் eqqtarians! என்றும் வெளிநாட்டுக்குச் சென்றபோது, வேறு வழியின்றி மீன் மட்டும் உண்ணப் பழகிக் கொண்டோம் என்றும் கூறும் பிராமணர்களைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! “I don’t mind” என்ற வாசகம் நம் வாழ்க்கையில் நுழைந்த நாள் முதல் நம்மை நாம் சீராக இழந்துகொண்டே வந்துள்ளோம். அடுத்தபடியாக நம்மை உயர்த்திக் காட்டிய உயரிய குணம் “எளிமை”. நமது உடுத்தும் உடையிலிருந்து, உண்ணும் உணவு, (தயிர் சாதம் என்று செல்லப் பெயர் இருந்தது)! நமது நடை உடை பாவனைகள், பேச்சு, செய்கை, மேலும் நாம் வாழும் தரம், அனைத்துமே எளிமையைப் பறைசாற்றியது. வசதி இருப்பினும், ஒரு பாயில் படுத்து உறங்கத்தான் செய்தோம், நமது வீடுகளில் புழங்கப்படும் பாத்திரங்கள், பீரோக்கள், இன்றும் இதர சாமான்கள் வழி வழியாக உபயோகப்படுத்தப்பட்டது. அதனால் குறைந்து போய்விடவில்லை. செழிப்பாகவே வாழ்ந்தனர். இன்று அதை அறவே காணாமல் போகவிட்டு, பகட்டும், பெருமையும் ப்ரதானமாய் வாழ்கிறோம். ப்ரளயத்தின்போது, இறைவன் பூமியிலுள்ள அனைத்து ஜீவன்களின் ஒரு மாதிரியைப் பத்திரப்படுத்தி அடுத்த யுகத்திற்கு எடுத்துச் செல்வாராம்! அதுபோல, கடைத்தெருவில் கிடைக்கும் அத்தனை சாமான்களிளும் ஒன்று நம் வீட்டில் உண்டு என்னும் நிலைமையில் எளிமையா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நாம்!!

பிராமணருக்கு மகுடமாய்த் திகழ்ந்த ஆச்சாரம், மடி இரண்டையும், தெரிந்து விரும்பித் தொலைத்தோம்! இவை இரண்டும் நமது மனதில் இறையுணர்வைத் தக்கவைத்தன. ‘சந்தி’ பூஜை, ஹோமம் போன்றவற்றை வேதத்தின் பாடமாக ஏற்று ஸ்ரத்தையுடன், பக்தியுடன், கடைபிடித்ததால், பிராமணர்கள் ஒழுக்கத்தில் முதல் நிலையில் இருந்தனர். Self discipline நம்மைச் சமூகத்தில் உயர்த்திக் காட்டியது. மாயையில் சிக்கி சின்னா பின்னமாகாமல் நமது மனிதப் பிறவியின் மேன்மையை உணர்ந்து, ஆன்மீக சிந்தனை நம்மை வழி நடத்த பரம்பொருளை அடையும் சரியான பாதையில் பயணித்திருந்தோம். அதனாலேயே நம்மவர்களின் முகங்களில் “ப்ரம்ம தேஜஸ்” என்பது மிளிர்ந்தது. ‘பதி’ என்னும் உயர்ந்த ஸ்தானத்தை உணர்ந்து மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்த அந்நாளைய ஆண்கள் கம்பீரமாக வாழ்ந்தனர். தவறு கண்டுபிடிக்க முடியாத நிலையில் பத்னிகள் தர்மப் பத்னிகளாக கணவர் சொல்லை மீறத் துணிவின்றி அடக்கமாய் வாழ்ந்து பெருமையைச் சேர்த்துக் கொண்டனர். ஆனால் இன்று, ஆண்கள் (90%) நமது குலாச்சார வழியை அறவே மறந்து, அனைத்துத் தீய வழக்கங்களையும் கற்றுக் கொண்டு Company demands என்று குடிப்பதையும் justify பண்ணிக் கொண்டு, மற்ற வர்ணத்தார்களின் அதீத உறவால், நமது பிராமண பாஷைகூட மறந்து, மேலே குறிப்பிட்ட உன்னத குணங்கள் அனைத்தையும் இழந்து வலம் வருவதால் தர்மப் பத்னிகள் உருவாக சாத்யமே இல்லாமல் போனது. இத்தகைய சூழலில் வளரும் சந்ததியர்கள் பிராமணரை என்னும் Identificationஆக Surnameஇல் மட்டுமே இருப்பர். காலம் மாறிவிட்டது! அதெல்லாம் அந்தக் காலம்! இந்தக் காலத்தில் சாத்யமா என்ன! என்று சாக்கு போக்கு கூறாமல், ஒரே ஒரு நிமிடம் நின்று நிதானித்து யோசிப்போமேயானால் புரியும்! ஒவ்வொரு பிராமணரும், தனிமனித உரிமையின் வட்டத்துக்குள் வந்துவிடும் “இந்த” விஷயங்களை மனம் உவந்து பின்பற்றினால் போதும். நமது பெருமைகள் தானாகவே நம்மை அடையும். இந்தக் காலப் படிப்பு, உத்யோகம், சம்பாத்யம், அனைத்தும் அப்படியே இருக்கட்டும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத அந்த “நாலு பேருக்காக” நமது குலாசாரங்களை நமக்கே நமக்குச் சொந்தமானவற்றை விட்டுவிட்டு இன்று நாமே நம்மைப் பார்த்து வெட்கப்படவேண்டா மோல்லியோ? சற்றே சிந்தித்து உணர்ந்து செயல்பட்டு பழைய காலப் பெருமைகளை மீண்டும் பெற்றுச் சமூகமும் சமுதாயமும், அய்யர் வர்றாருப்பா...! நமஸ்காரம் ஐயா என்று மனதில் மரியாதையோடு கூறவைப்பது நம் கையில்தானே இருக்கிறது...!

No comments:

Post a Comment