Thursday, February 7, 2013

தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?

தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?
"தாயிற்சிறந்த கோயிலுமில்லை' என்பார்கள். பாலூட்டி சீராட்டி கண் போல காத்தவள் தாய். திருமணம், பணிவாய்ப்பு போன்ற சுபவிஷயங்களின் போது பெற்றோரை வணங்க வேண்டியது அவசியம். பெற்றோருக்கு பாதபூஜை செய்வது இதற்காகவே. ஜோதிட ரீதியாக தாயை வழிபட்டவருக்கு சந்திரன் நன்மை அளிப்பதாகச் சொல்வர். சந்திராஷ்டம நாட்களில் தாயை வணங்குவது பிரச்னையைத் தீர்க்கும்.

சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?
கிணற்றில் போடுவதால் மீன் முதலிய உயிரினங்கள் பலன் பெறும். இருந்தாலும், குடிநீர் கிணற்றில் சாதத்தைபோட்டால் அசுத்தமாகி விடும். அதனால், ஏதாவது மரத்தடியில் வைத்தாலே காக்கை, குருவி போன்ற பறவைகள் வந்து உண்ணும்.

* வாரம் ஒருமுறை திருவிளக்கு பூஜை நடத்த விரும்புகிறேன். செய்யலாமா? திருவிளக்கு பூஜை நடத்த பூர்வஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். வாரம் ஒருமுறை என்ன! வசதியிருந்தால் தினமும் கூட நடத்தலாம். உத்ராயண புண்ணிய காலமான தையிலேயே தொடங்கி விடுங்கள். அதிலும் தைவெள்ளி மிகமிக சிறப்பு.

கிரகப் பிரவேசத்தில் தண்ணீர் குடத்தை வீட்டின் உரிமையாளர் தான் எடுத்து வரவேண்டுமா? வேறு யாராவது எடுத்தால் குறை உண்டாகுமா?
ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? சம்பிரதாயமான தண்ணீர் குடம் கொண்டுவருவதை மற்றவர் செய்வதில் தவறொன்றும் கிடையாது. உங்கள் மனதைக் குழப்பி, கிரகப்பிரவேச மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment