Wednesday, February 6, 2013

முக்தி ஒரு சிலருக்கு தான்கிடைகிறது

மனிதனாக பிறந்தவர்களின் ஆசை, முக்தி பெற வேண்டும் என்பதுதான். அனால், இந்த முக்தி ஒரு சிலருக்கு தான் கிடைகிறது. சில ஷேத்திரங்கள், 'முக்தி ஸ்தலம்' என்று சொல்லப்பட்டுள்ளது. கமலையில்(திருவாரூரில்) பிறந்தால், முக்தி; சிதம்பரத்தை(நடராஜரை) தரிசித்தால், முக்தி; திருவண்ணாமலையை நினைத்தாலே, முக்தி; காசியில் இறந்தால், முக்திஎன்றெல்லாம் கூறுகின்றனர்.

இதில், கமலையில் பிறப்பது அவன் கையில் இல்லை; அது, அவன் தாயாரின் விருப்பத்தைபொறுத்தது; அடுத்து, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. எத்தனையோ தடவை, சிதம்பரம்வழியாகப் போவர்; அனால், இறங்கி நடராஜா தரிசனம் செய்ய நேரமிராது; அடுத்தது, ரொம்பசுலபம். அண்ணாமலையை நினைத்தாலே போதும், முக்தி கிடைக்குமாம்; எவ்வளவோதேவைகள், தொல்லைகள். அருணாச்சலத்தை, அதான் திருவண்ணாமலை யாரை நினைக்கநேரமிராது.

அடுத்தது, காசியில் மரிப்பவர்க்கு முக்தி; அனால், அது எல்லார்க்கும் கிடைத்துவிடாது. காசியில்மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களைவரவிடாமல் தடுத்தும், அப்படி யாரவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்கு கிளப்பிவிடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.

புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று எத்தனை முறை புறப்பட்டாலும் போகமுடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கு மரிக்கமுடியாது. புண்ணியமுல்லவன் அங்கே இருந்தால், அது பாக்கியம், அல்லது அவன் வேறுஎங்கேயாவது இருந்தாலும் மரணகாலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது , எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கு முக்தி!

காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா, எத்தனையோ சாமான்களை சேகரம் செய்துவைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியல் போய்டின்னை திறந்து பார்க்கிறாள். அதுக்குள் கட்டெறும்பு ஒன்று முழித்து முழித்து பார்க்கிறது. 'அடச்சீ...... கட்டெறும்பு வந்துடுத்தே'.., என்று சொல்லி,எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டுகாலால் மர்த்தனம் செய்கிறாள்.

கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கெட், கூட வாங்காமல், சாப்பாட்டுச் செலவும்இல்லாமல், காசியில் மரணம்; முக்தி! இது எல்லோருக்கும் கிடைத்து விடாது.அங்கே யாரவதுமரணமடைந்தால், அழ மாட்டார்கள்; காசி விஸ்வநாதன் அழைத்து கொண்டான்' என்பார்கள். இறந்தவனுடைய அஸ்தியில்( எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போடவேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணிய லோக வாசம் கிடைக்கும். நம் பாரதத்தில் எத்தனையோ ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள் என மனிதன் நற்கதி பெற பல மார்க்கங்கள் உள்ளன. இவைகளிலும் நான்கவனம் செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment