Thursday, February 7, 2013

பரம்--அபரம்

கடவுள் ஒருவரே என்றாலும், அவரவர் மனவிருப்பத்திற்கேற்ப உருவம் கொடுத்து, பல பெயர்களால் குறிப்பிடுகிறோம். சில தெய்வங்களுக்கு ஒரு முகம், சிலருக்கு இரண்டு, மூன்று என பல முகங்கள், பல கைகள் அமைத்து வழிபடுகிறோம். ஆனால், எந்த தெய்வமாக இருந்தாலும் திருவடி என்னும் பாதங்கள் இரண்டு மட்டுமே இருக்கும். தன்னை நாடி வரும் பக்தர்கள், இருகைகளால் பிடித்துக் கொள்ள ஏதுவாக இறைவனுக்கு இரு பாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த திருவடிகள் பக்தர்களுக்கு பரஞானம், அபரஞானத்தை தருகின்றன. அபரஞானம் என்பது உலக வாழ்வுக்குத் தேவையான செல்வம் உள்ளிட்ட வசதிகள், இன்பங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிகள். பரஞானம் என்றால் ஆன்மிக முன்னேற்றம். அபர ஞானத்தால் நிம்மதி கிடைக்கிறதா என்றால் இல்லை. கோடிப்பணம் இருந்தாலும் நான்கு இட்லிக்கு மேல் சாப்பிட்டால் உடம்பு தாங்கமாட்டேன் என்கிறது. நோய்களால் அவதி, பணத்தைக் கறக்க பிள்ளைகள், உறவுகளால் மனநிம்மதி இழப்பு...அட பணமே! நீயும் வேண்டாம், உன் சகவாசமும் வேண்டாம்... நான் ஆண்டவனிடம் போகிறேன், என்று சொத்துக்களை விட்டுவிட்டு, கோயிலுக்கு போய் காவியணிந்து அமர்ந்து விட்டால் நிம்மதி கிடைக்கிறது. அபரம் (உலக இன்பம்) என்னும் என்னும் போதையில் இருந்து விடுபட, பரம் (இறை நினைவு) என்னும் கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment