Thursday, May 30, 2013

மாத பிரதோஷ பிரசாதங்கள் பலன்கள்

சித்திரை - தயிர் சாதம், நீர் மோர் - உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.

* வைகாசி - பால், சர்க்கரை பொங்கல் - எல்லாவித வயிற்றுக் கோளாறு நீக்கி சுகமடைதல்.

* ஆனி- தேன், தினை மாவு - மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* ஆடி - வெண்ணை சர்க்கரை சேர்த்து - கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.

* ஆவணி - தயிர் சாதம் - காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.

* புரட்டாசி - புளியோதரை, சர்க்கரை பொங்கல் - விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.

* ஐப்பசி - உளுந்தவடை, ஜிலேபி - சீதளமான நோய் விலகும்

* கார்த்திகை - தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் - பெண்களுக்கு கர்ப்ப சம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.

* மார்கழி - வெண் பொங்கல், சுண்டல் - மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.

* தை - தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க - விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

* மாசி - நெய்யுடன் சர்க்கரை - சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு உப்பிசம் போன்றவை விலகும்.

* பங்குனி - தக்காளி சாதம், தேங்காய் சாதம் - மனக்கிலேசம், மனக் காளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றும்போது ஏழுமுறை வலமாகவும், இருமுறை இடமாகவும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.நவக்கிரகங்களை வழிபட்டு விட்டு சிவனையோ, விநாயகரையோ தரிசிக்கலாகாது. எல்லா தெய்வங்களையும், தரிசித்து கடைசியில் தான் நவக்கிரகங்களை தரிசித்தல் வேண்டும்.

சிவ மந்திரம்.......

சிவனை நாம் வணங்கும் போது, `ஓம் சிவாய நம' என்ற மந்திரத்தை ஓதி வணங்குகிறோம். இம்மந்திரம் பல பெரிய தத்துவங்களை உணர்த்துகிறது. இதில் உள்ள `சி' எனும் எழுத்து சிவனையும், `வா' எனும் எழுத்து அம்பாளையும், `ய' எனும் எழுத்து மனிதர்களையும், `நம' எனும் சொல் மும்மலங்களான, மாயை, ஆணவம் மற்றும் கர்வத்தைக் குறிக்கிறது. இம்மந்திரத்தை ஓதி இறைவனையும்,இறைவியையும், மனிதன் வேண்டும் போது நம்மைப் பிடித்திருக்கும் கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து விடுபடலாம்

No comments:

Post a Comment