Friday, June 21, 2013

இல்லத்து நித்ய பூஜையில் நாம் கவனிக்க வேண்டிய சில குறிப்பிட்ட விசேஷங்கள்

இல்லத்து நித்ய பூஜையில் நாம் கவனிக்க வேண்டிய சில குறிப்பிட்ட விசேஷங்கள்
-------------------------

* கூடுமான வரையில் விக்ரஹங்களை இல்லத்தில் வைத்து பூஜிப்பதைத் தவிர்க்கவும். படங்கள் போதுமானது.
* அதே மாதிரி கடையில் இப்பொழுது கிடைக்கும் அல்லது பலரால் இலவசமாக சரமாரியாக அளிக்கப்படும் யந்திரங்களை இஷ்டத்திற்கு வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. யந்திரங்கள் மிகவும் மகிமையானவை. அவற்றை பூஜிக்கும் விதானமே தனி. அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. நம்மால் எல்லோராலும் வழிபட சாத்தியமாகாமல் போகலாம். அந்த தோஷம் நமக்கு வேண்டாம்.
... *சந்தனம் அரைத்தபின், சந்தனத்தை கட்டை விரல் சேர்க்காமல் எடுக்க வேண்டும். அரைத்தப் பிறகு சந்தனக் கட்டையும், அடிக் கல்லையும் ஒன்றாக ஒன்றின் மேல் ஒன்றை வைக்கக் கூடாது. தனித்தனியாக வைக்க வேண்டும்.
* பூஜையில் பெண்கள் சந்தனம் அரைத்துக் கொடுக்கக் கூடாது. ஆண்கள் விளக்கேற்றுவதும், விளக்கை மலையேற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
* பூஜை செய்கின்றேன் என்று இல்லத்து மற்ற வேலைகளைப் புறக்கணித்தோ,உதாசீனப்படுத்தியோமணிக்கணக்கில் பூஜையில் ஈடுபடத் தேவையில்லை. பக்தியும், சிரத்தையும் மடி ஆசாரமும்தான் முக்கியம். விசேஷ நாள், கிழமை யென்றால் அது விஷயம் வேறு

No comments:

Post a Comment