Wednesday, June 19, 2013

அருந்ததி பார்ப்பது ஏன் ?

அருந்ததி பார்ப்பது ஏன் ?
திருமணமான புதுத் தம்பதிகள் பின்னிரவில் அருந்ததி பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது .
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி . ஒரு சமயம் தேவேந்திரன், அருந்ததியிடம் வந்து, " ஒரு குடம் கொண்டு வா . குளத்தில் இருந்தோ , கிணற்றீல் இருந்தோ நீர் எடுக்காமல், குடத்தில் நீர் நிரப்பிக் காண்பிக்கிறேன் " என்றான் . அருந்ததி அவன் சொன்னபடியே குடம் கொண்டு வந்தாள் .
தேவேந்திரன் , சிறிது நேரம் தியானம் செய்து விட்டுக் குடத்தைப் பார்த்தான் . குடத்தில் கால் பாகம் நீர் நிரம்பியிருந்தது . பிறகு வாயுதேவன் வந்து தியானம் செய்தான் . அடுத்த கால்பாகம் நீரை மட்டுமே நிரப்பமுடிந்தது . எஞ்சிய அரைக் குடத்தை நிரப்பித் தருவதாகக்கூறி அருந்ததி தியானம் செய்யத் தொடங்கினாள் . சிறிது நேரத்தில் குடம் முழுவதும் நீரால் நிரம்பியது
இதைக் கண்டு தேவேந்திரன் , ஆச்சர்யமடைந்தான் . " தேவர்களால் கூட முடியாத காரியத்தை உன்னால் எப்படி செய்ய முடிந்தது ?" என்று கேட்டான் . அருந்ததி , " என் கணவரை நினைத்து தியானம் செய்ததால்தான் அது சாத்தியமானது " என்று கூறினாள் .
தேவர்கள் எல்லோரும் , அவளூடைய கற்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டியே நட்சத்திரமாகப் பிறக்கும்படி செய்தனர் . அது முதல் திருமணம் முடித்த தம்பதியினர் , கற்புக்கரசியாக விளங்க வேண்டி , அருந்ததி பார்ப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது

No comments:

Post a Comment