Friday, June 21, 2013

ரோகி , போகி , யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள்


ரோகி , போகி , யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள் . ரோகி என்றால் நோயாளி . உடல்நிலை மோசமாக இருக்கும்போது , ஒருவனுக்குத் தூக்கம் வராது . போகி என்றால் இன்பத்தை நாடிப் போகிறவன் . அவன் நாடும் இன்பங்கள் பலவற்றுக்கு இரவுதான் உகந்தது . யோகி இரவில் தூங்காமல் இருப்பதற்குக் காரணம் , இரவும் இருளும் அவருடைய ஆன்மிகப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் .
காரணம் , இருளில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பாகுபாடு இன்றி ஐக்கியமாகிவிடுகின்றன . வெளிச்சம் வந்ததும் ஒவ்வொன்றும் தன் தனி அடையாளத்தோடு விறைத்து நிற்கிறது . இருள் என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கிறது . வெளிச்சம் என்பது பொய்க்கு அருகில் இருக்கிறது .
ஆன்மிகத்தில் இருள் என்பது உன்னதமாக கருதப்படுகிறது

No comments:

Post a Comment