Wednesday, June 19, 2013

பரிணாம வளர்ச்சிக்கேற்ப இறைவன் அவதாரம் எடுத்துப் பூமிக்கு வந்திருக்கிறார்

படிகள் பத்து !
மனித இனம் , விலங்கு இனம் முதலியவற்றைத் தன்னில் கொண்டு அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப இறைவன் அவதாரம் எடுத்துப் பூமிக்கு வந்திருக்கிறார் என்று ' பத்து அவதாரம் ' நமக்குப் புலப்படுத்துகிறது . எப்படி ?
1 ) மச்சாவதாரம் : தண்ணீருக்கும் அடியில் உள்ளது மீன் .
2 ) கூர்மாவதாரம் : கொஞ்சம் தண்ணீருக்கு மேலே , கொஞ்சம் கீழே வசிக்கும் ஆமை .
3 ) வராக அவதாரம் : பூமிக்கு மேலே உள்ள மிருகம் . பன்றி .
4 ) நரசிம்மாவதாரம் : விலங்கு நிலையும் , மனித நிலையும் கலந்தது . ( சிங்கம் -- மனிதன் ) .
5 ) வாமனாவதாரம் : குட்டையான மனித நிலைக்கு மாறுதல் .
6 ) பரசுராம அவதாரம் : கோபம் கொண்ட மனித நிலை -- குறையுள்ளது .
7 ) பலராமர் அவதாரம் : சாதாரண மனிதர் .
8 ) கிருஷ்ணாவதாரம் : விளையாட்டும் , வினையும் கலந்த மனிதத் தன்மை .
9 ) இராமாவதாரம் : பொறுமையுடன் விவேகமான மனித நிலை கொண்டது .
10 ) புத்தர் அவதாரம் : மனித நிலை கடந்து மேலான நிலை கொண்டது .

No comments:

Post a Comment