Thursday, July 25, 2013

துர்தேவதைகள் தொல்லை விலக...

நீலம் துரங்கமதிரூட விராஜமாநா
நீலாம்ஸுகாபரணமால்ய விலேபநாட்யாம்
நித்ராபடேந புவநாதி திரோதநாநா
கட்காயுதா பகவதி பரிபாது பக்தாந்
(திரஸ்கரணீ ஸ்லோகம்)

பொதுப்பொருள்:

மகாவாராஹி தேவியின் ப்ரத்யங்க தேவியான திரஸ்கரணீ தேவியே, நமஸ்காரம். கைகளில் வில்லும் அம்பும் தரித்து, நீலநிற குதிரையில் ஆரோகணித்தவளே, புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி தியானம் செய்யும் தோற்றம் கொண்டவளே, உறக்கப் போர்வையால் உலகத்தை  மறைப்பவளே, மகாமாயையாகவும் நித்ராதேவியாகவும் விளங்கி உலகை வசப்படுத்துபவளே, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் அம்மா.

(இத்துதியை இரவு நேரத்தில் பாராயணம் செய்தால் துர்தேவதைகளினால் ஏற்படும் தொல்லைகள் நம்மை அண்டாது)

No comments:

Post a Comment