Wednesday, July 24, 2013

விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு -கிருபானந்தவாரியார்

விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு
--திருமுருக கிருபானந்தவாரியார்


 கயிலையங்கிரியில் ஒரு பாலுள்ள சித்திரமண்டபத்து அடியார்க்கருள் புரியுமாறு வேதங்கள் ஐயா என ஒங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியயராம் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளினார்.

... அச் சித்திர மண்டபச் சுவர்களில் எழுதியுள்ள அழகிய ஓவியங்களைக் கண்டு உலவுங்கால், ஒரு பால் ஏழுகோடி மகாமந்திர சொரூபங்களும், அவைகளுக்கெல்லாம் முதலிய சமஷ்டி[(ஒன்றாயிருத்தல்)] 1, வியஷ்டி[(வெவ்வேறாயிருத்தல்)] 2 பிரணவ வடிவ மந்திர சொரூபங்களும், அதில் ஆண் யானை பெண் யானை வடிவங்களும் வரைந்திருக்க, அவற்றுள் சமஷ்டிப் பிரணவ வடிவமாகிய பெண் யானைச் சித்திரத்தின் மீது அகில சக அண்ட நாயகியாகிய அம்பிகையும், வியஷ்டி வடிவமாகிய ஆண் யானைச் சித்திரத்தின் மீது ஆலமுண்ட அண்ணலும் விழிமலர் பரப்பினர்.

அங்ஙனம் பார்த்தவுடன் கோடி சூரியப் பிரகாசத்துடனும், யானை முகத்துடனும், நான்கு புயாசலங்களுடனும், ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று விநாயகமூர்த்தி அவதரித்தனர்.

No comments:

Post a Comment