Thursday, July 25, 2013

நினைத்தது நிறைவேற, அனைத்து லாபங்களும் கிட்ட

காருண்யபூர்ணநயனே கலசோபிமாலே
பத்மாலயே மதுரகோமள வாக்விலாஸே
ஸத்பக்தகல்பலதிகே புவனைகவந்த்யே
ஸௌந்தர்யவல்லி சரணம் ப்ரபத்யே
(ஸௌந்தர்யவல்லி அஷ்டகம்)

பொதுப்பொருள்:

கருணை ததும்பும் கண்களைஉடையவளே, ஒளி மிகுந்த முத்துமாலையை அணிந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே, வாக்கி னிலே இனிமையும் அழகும் கொண்டவளே, எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத்  தக்கவளே, சௌந்தரவல்லித் தாயே, நமஸ்காரம்.

(இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் திருமகள் திருவருளால் நினைத்தது நிறைவேறி ஐஸ்வர்யம், வியாபார விருத்தி,  உத்தியோகத்தில் உயர்வு, சந்தான பாக்யம் என்று அனைத்துவித லாபங்களும் கிடைக்கும்.)

No comments:

Post a Comment