Monday, July 29, 2013

பிரம்மோற்ஸவம் என்பதன் விளக்கம் /* கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாதா

** பிரம்மோற்ஸவம் என்பதன் விளக்கம்
கோயில்களில் பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு மாதம் உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. உதாரணமாக சித்திரை உற்ஸவம் மதுரையிலும், கார்த்திகை உற்ஸவம் திருவண்ணாமலையிலும் என கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை விழாக்கள் நிகழ்கின்றன. இதில் முக்கியமான நிகழ்ச்சி சுவாமி பவனி. கடவுளே பக்தர்களைத் தேடி வந்து அருள்புரிவதாக அர்த்தம். நல்ல மழை பெய்து உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டியே கோயிலில் திருவிழாக்கள் நிகழ்கின்றன. உலகில் உயிர்களைப் படைப்பவர் பிரம்மா. தாம் படைத்த அனைத்து உயிர்களும் நலமாய் வாழ, ஒவ்வொரு ஊரிலும் பிரம்மாவே உற்ஸவம நடத்துவதாக ஐதீகம். பத்து நாட்களுக்குக் குறையாமல் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை இது நடத்தப்படும். பிரம்மா நடத்தும் உற்ஸவம் பிரம்மோற்ஸவம் எனப்பட்டது.

* வீட்டிற்கு வெளியே பிள்ளையார் சிலை வைத்து வழிபடுவது ஏன்?
தெருக்குத்தல், கோபுரக்குத்தல் போன்ற இடங்களில் வீடுகட்டுவது கூடாது. அப்படி செய்தால் வளர்ச்சி இருக்காது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வீடு கட்டி விட்டால், வாசலில் பிள்ளையார் சிலை வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி செய்தால் குத்தல் தோஷம் நீங்கிவிடும்.

* கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாதாமே ஏன்?
நீறில்லா நெற்றி பாழ்; கோயில் இல்லா ஊர் பாழ்'என்பது முதுமொழி. நெற்றியில் திருநீறு அணியாதவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. கோயில் இல்லாத ஊரில் சுபிட்சம் இருக்காது என்பது இதன் பொருள். யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு திண்டாடுபவர்கள் சுவாமியிடம் முறையிட்டு மன அமைதி பெறுவதே கோயில்களுக்கு செல்வதன் நோக்கம். இயற்கை சீற்றங்களில் இருந்தும் காக்கக் கூடிய வகையில் கோயில்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்று மனிதவள, விஞ்ஞான, மருத்துவரீதியாக கோயிலின் அவசியம் பற்றி எவ்வளவோ சொல்லலாம். இதனாலேயே கோயில் இருக்கும் பகுதியில் குடியிருக்குமாறு சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?
தேய்பிறை நாட்கள் சுத்தமாக வேண்டத்தகாதது அல்ல. ஒரு சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்ததால் வந்தவினை இது. தேய்பிறை சப்தமி வரை உத்தமம்- இதுமுதல்நிலை. தசமி வரை மத்திமம், இது இரண்டாம்நிலை. சதுர்த்தசி வரை அதமம்,இது மூன்றாம்நிலை. தவிர்க்க முடியாத சூழலில் மூன்றாம் நிலையிலும் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்.

பழைய காமாட்சி விளக்கைப் புதுப்பித்து விளக்கேற்றலாமா?
உடையாமல் இருந்தால் தாராளமாகச் செய்யலாம். பழையதை புதுப்பித்து வழிபாட்டில் பயன்படுத்துவது வழக்கில் உள்ள ஒன்று தான்.

No comments:

Post a Comment