Tuesday, July 9, 2013

பொறுமையில் பூமாதேவியைப் போல இருக்க வேண்டும்

பொறுமையில் பூமாதேவியைப் போல இருக்க வேண்டும் என்றும் அமைதியான குணம் கொண்டோரை பூமாதேவி போன்று அமர்ந்திருக்கிறார் என்றும் வழக்கத்தில் சொல்வார்கள். இந்த உலகில் நீர் அமைதியாக இருக்கிறது. அதில் நாம் என்ன அசுத்தத்தைக் கரைத்தாலும், பூமி எதையும் தாங்குகிறது.

பொறுத்தார் பூமி ஆள்வார், பொங்கினார் காடு கொண்டார் என்று சொல்வாக்கு எண்டு. ஒரு சமயம் திருமகளிடம் இருந்து நில மகளாம் பூமா தேவியிடம் வந்த பெருமாள் `பூமா தேவியே! இந்த அண்டத்திலே சதுர்யுகங்கள் நடைபெற காலம் இருக்கிறது.

த்ரேதாயுகத்தில் ஸ்ரீராமனுடன் ஜானகியாக வந்து வீரலட்சுமியாக நின்று இராவணனைக் கொன்ற நீ என்னிடம் மட்டும் பொறுமையாக உலக அக்கிரமங்களைச் சகித்துக் கொண்டிருக்கிறாயே ஏன்ப என்று கேட்டதற்குச் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுப் பேசினாள்.

பெண்ணாகப் பிறந்து விட்டவள் பொறுமை என்னும் நகையை முன்னதாக அணிந்த பிறகே பொன்னகை அணிந்துப் புன்னகை புரிதல் வேண்டும். அலை மகள் உங்கள் அங்கமெல்லாம் படர்ந்து உங்களுக்கு அழகு சேர்க்கிறாள். ஆனால் பூமகளாக இருக்கும் யான் உங்களது இருப்பிடத்தை வளப்படுத்துகிற பூமி நாச்சியார் ஆக விளங்குகிறேன்.

ஆர்ப்பறிக்கும் கடல், பொங்கி எழுகின்ற எரிமலைகள், நதிக் கூட்டங்கள் போல ஓலமிடும் மனிதர்கள், புண்ணிய ஆத்மாக்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகள் அனைத்தையும் சகித்துக் கொண்டு நான் பொறுமையாக இருந்தால்தான் என்னை பொறுமைக்கு உதாரணமாகச் சொல்வார்கள்.

1.ஒரு பெண்ணாகப்பட்டவள் தாயிடமும், தந்தையிடமும், கண வனிட மும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.

2. தர்மம், யாகம், இறை பூசனை செய்து -பொறுமையோடு யார் வந்திடினும் அழைத்து உபசரனை செய்து இல்லறம் நடத்த வேண்டும்.

3. பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட இந்த உலகம் உருண்டையாக இருப்பதனால், சுழன்று கொண்டு காலநிலைகளை மாற்றி அமைப்பது இயற்கை. நெருப்புக்காலம் வரும் போதும் நீர்க் காலம் வரும் போதும்.

ஒன்றை அனுபவித்து ஒன்றுக்காகக் காத்திருந்து பொறுமையாக உலக ஜீவன்கள் பணிகளை ஆற்றி வருவதை நான் தாயாக இருந்து வேடிக்கை பார்க்கிறேன். மிக்க சந்தோஷம் அடைகிறேன்.

 ஓ பரந்தாமனே! பரிபாலன கர்த்தாவான உமக்கு இக்கருத்தை மகிழ்வோடு கூறுகிறேன் என்று விளக்கம் தந்தாள். தேவர்கள் பூமாதேவிக்கும் பூமாரி பொழிந்தனர்.

No comments:

Post a Comment