Thursday, August 22, 2013

பெற்றோரை கவனிக்கவில்லையா? பிதுர்தோஷம் வருமே!

நம் குடும்பத்தில் மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்யாமல் போனால், பிதுர் தோஷம் ஏற்படும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நன்மைகள் தடைபடும். சிலருக்கு கனவிலும் வந்து ஏதாவது தேவைகளைக் கேட்கக்கூடும்.  சிலர் வயதான காலத்தில் பெற்றோரைச் சரிவர கவனிக்காமல் விட்டு, அவர்களின் இறப்புக்கு பின் பிதுர் சாபத்திற்கு ஆளாவதும் உண்டு. இந்த தோஷம் நீங்க அமாவாசை விரதம் இருந்து, பசுமாட்டிற்கு புல்,கீரை,பழம் ஆகியவற்றைக் கொடுத்து வழிபட வேண்டும்.  காலையில் நீராடி, பசுவை மும்முறை வலம் வந்து, கைகளால் தொட்டு வணங்கவேண்டும். வசதியிருப்பவர்கள் சமுத்திரக்கரையில் நீராடி பசுவும் கன்றுமாக தானம் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment