Monday, August 26, 2013

பாலைவன வாழ்க்கை சோலைவனமாக மாற!


 வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித மாக அமைகிறது. நேற்று இருந்ததைப் போல் இன்று இல்லையே? இன்று இருப்பதைப் போல், நாளை இருக்குமா? என்ற கேள்விகள் ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடிக்கத்தான் செய்கின்றன.

அந்த அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நாம் தூங்குவதற்கு முன்னால் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டதை புரிந்து கொள்ள வேண்டும். நாளைய பொழுதாவது நல்ல பொழுதாக மலர வேண்டும்.

நான் நினைத்தது நிறைவேற வேண்டுமென்று நினைத்து தனது இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்து விட்டு தூங்கத் தொடங்க வேண்டும். சிவாய நம! என்றோ ஓம் நமோ நாராயணாய நமக!

என்றோ உள்ளத்தில் இடம் பெற்ற தெய்வத்தின் பெயரை உச்சரித்து விட்டு படுத்தால் ஒப்பற்ற பலன்களை காணலாம். தூங்கி எழும் பொழுதும் இதே போல் உச்சரிக்க வேண்டும். அப்போது தான் பாலைவனமாக இருக்கும் வாழ்க்கை கூட சோலைவனமாக மாறும். 

No comments:

Post a Comment