Thursday, August 22, 2013

உண்ணும் உணவைப் பழிக்காமல் இருப்பதே விரதம் தான்

உண்ணாமல் தெய்வசிந்தனையுடன் இருப்பது விரதம். திதி, நட்சத்திர அடிப்படையில் சாப்பிடாமல் இருக்கும் எத்தனையோ விரதங்கள் இருக்கின்றன. தைத்ரிய உபநிஷத்தில் வித்தியாசமான விரதம் பற்றி கூறப்பட்டுள்ளது. உண்ணும் உணவைப் பழிக்காமல் இருப்பதே விரதம் தான் என்று பிருகு மகரிஷிக்கு, அவருடைய தந்தை உபதேசிக்கிறார்.  சாப்பாடு சகிக்கவில்லை என்று யாரும் இகழக் கூடாது.  இந்த உணவு எனக்கு நன்மை தரும். ஆரோக்கியம் தரும். மனத்தூய்மை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக உண்ணவேண்டும். இப்படி தைத்ரியஉபநிஷத்தில் உணவின் மகத்துவம் கூறப்படுகிறது. இறுதியாக உணவே கடவுள் என்று அந்த ரிஷி சிறப்பிக்கிறார். இதனையே அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று குறிப்பிடுவர். இதையே கிராமங்களில் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதசுவாமி என்று சொலவடையாகவும் சொல்வர். அன்னலட்சுமி, அன்னத்தாய் என்று உணவை தெய்வாம்சமாக வணங்குவர்.

No comments:

Post a Comment