Sunday, September 29, 2013

நாம் பூஜை செய்யும் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்

 
 
நாம் பூஜை செய்யும் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்
 
நாம் பூஜை செய்யும் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என ஆன்மீகப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவை வருமாறு:- விடியற்காலப் பூஜைக்குரிய பூக்கள் கொன்றை, சாமந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப் பூக்கள்.

* பகற்காலப் பூஜைக்குரிய பூக்கள் செந்தாமரை, செவ்வலரி, பாதிரி முதலிய சிவப்பு நிறப் பூக்கள்.

* யாம காலப் பூஜைக்குரிய பூக்கள் மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளைருக்கு முதலிய வெள்ளை நிறப் பூக்கள். பொதுவாக மஞ்சள், வெள்ளை நிறப் பூக்கள் பூஜைக்கு மிக உத்தமம்.

அம்பாளை வழிபட:

அம்பாளை வழிபட உகந்த மாதங்கள் தை, ஆடி,
அம்பாளை வழிபட உகந்த நாட்கள் செவ்வாய், வெள்ளி.
அம்பாளை வழிபட உகந்த திதி அஷ்டமி, சதுர்த்தசி, பவுர்ணமி.
அம்பாளை வழிபட உகந்த நட்சத்திரம் உத்திரம்.

No comments:

Post a Comment