Saturday, September 21, 2013

விநாயகர் தத்துவம் (பாபாவின் விளக்கம்) தோப்புக்கரணம்...விளக்கம்

விநாயகர் தத்துவம் (பாபாவின் விளக்கம்)


கணேசரின் யானைத் தலையின் தத்துவம் யாதெனில் யானை சிறந்த அறிவு படைத்தது. யானைக்கு மேதா சக்தி அதிகம் மேலும் யானையின் காதுகள் பெரியதாக இருப்பதால் நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கிரகிக்க முடிகின்றது. இறைவன் புகழைக் கேட்பது என்ற ஆன்மீக சாதனையின் முதற்படிக்கு காதுகள் கூர்மையாக இருப்பது அவசியம் யானை புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஓரே மாதிரி எடுத்துக் கொள்கின்றது. தேவையற்றவையை உதறி விடுகின்றது. நல்ல விஷயங்களை மௌனமாக ஏற்றுக்கொள்கின்றது. இவ்வாறு மனித குலத்திற்கு அத்தியாவசியமான பாடங்களை விநாயகர் நமக்கு கற்றுத் தருகிறார்.




தோப்புக்கரணம்...
------------------------

நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போது பிள்ளையாருக்கு முன்னால் தோப்புக்கரணம் போடுவோம்.
...
அப்போது எமது மூளை சுறுசுறுப்பாகவும் ஞாபக சக்தி மிக்கதாகவும் இருக்கும்.

பிள்ளையார் யானை முகத்தோன் (யானைக்கு ஞாபகசக்தி அதிகம்).அந்த சக்தியை பிள்ளையார் எமக்கு கொடுக்கிறார்.

அதே போல் வீட்டுப்பாடம் செய்ய மறந்த மாணவர் முன்பு பாடசாலையில் ஆசிரியருக்கு முன்னால் தோப்புக்கரணம் போடுவார்.

ஒரு மாணவன் தோப்புக்கரணம் போடும் போது மூளை கூர்மை அடைவதோடு ஞாபகவலிமையையும் அதிகரிக்கிறது.

கலிபோர்னியாவில் உள்ள Dr.Eric Robins(Physician) என்பவர் தோப்புக்கரணம் போடும்போது மூளை சுறுசுறுப்பாகும் என்று தனது ஆய்வில் கூறி உள்ளார் .

எமது முன்னோர்களது பல செயற்பாடுகளுக்கு அர்த்தங்கள் பல இருக்கின்றன!
 

No comments:

Post a Comment