Friday, September 27, 2013

இறைவன் சப்பர பவனி வருவது பற்றி அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் காரணம்!

இறைவன் சப்பர பவனி வருவது பற்றி அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் காரணம்!
கோயில்களில் திருவிழா நடக்கும் போது, கற்சிலைகளை சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை. செம்பு விக்ரகங்கள் அல்லது பிற உலோகங்களுடன் செம்பு கலந்த விக்ரகங்களை சுமந்து வருகிறார்கள். முதலில் சப்பர பவனிக்கான ஆன்மிக காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். நம்மில் பலர் கோயிலுக்குச் செல்வதில்லை. வயது, நோய், கர்ப்பகாலம் போன்ற காரணங்களாலும் போக முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களும், திருவிழா காலத்தில் தெய்வ தரிசனம் பெற வேண்டும் என்பதற்காக, சுவாமி பவனி வரும் வழக்கம் உருவானது. இதிலே ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மின்சார வயருக்குள் செம்புக்கம்பி இருக்கிறது. இது மின்சாரத்தை அதி வேகமாக கடத்தி விளக்குகளை எரிய வைக்கிறது, இயந்திரங்களை இயங்க வைக்கிறது. அதுபோல, செம்பு விக்ரகங்களின் அழகு, நம்மை அப்படியே நம்மை ஈர்த்து பக்தியில் திளைக்க வைக்கிறது. செம்பைத் தேய்க்க தேய்க்க அதன் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறைசக்தி என்னும் மின்சாரம் பக்தனை விரைவில் அடையவே, சுவாமி பவனியை உருவாக்கினார்கள்.

No comments:

Post a Comment