Tuesday, October 29, 2013

வளையல்கள் அணிந்திருப்பது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும்.

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வளையல்கள் அணிந்த வலக்கையில் வாங்கி அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கையில் எப்போதும் ஜொலிக்கும் வளையல்கள் அணிந்திருப்பது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment