Wednesday, October 30, 2013

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.

1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.

2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.

3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.

4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.

5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.

6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.

7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.

8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.

10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.

11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.

12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.

மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

No comments:

Post a Comment