Thursday, January 30, 2014

கடமையை செய் பலனில் பற்றுவைக்காதே


கடமையை செய் பலனில் பற்றுவைக்காதே
-------------
பகவத்கீதா 2.47
------------
வாழ்க்கையில் இது மிக முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடமாகும். நமக்கு பல கடமைகள் இருக்கின்றன.நாட்டிற்கு செய்யும் கடமை,தாய் தந்தையருக்கு செய்யும் கடமை,குழந்தைகளுக்கு செய்யும் கடமை என்று இந்த கடமையின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது....

இந்த கடமைகளை முறையாக செய்ய வேண்டியது நமது கடமை.இவற்றை செய்யாமல் இருப்பது தவறு.தனது குழந்தைகளுக்கு ஒரு தந்தை செய்யும் கடமையை செய்ய வேண்டும்.ஆனால் அதற்கு பதிலாக அந்த குழந்தை வளர்ந்தபின் தன்னை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.ஒரு வேளை அவ்வாறு எதிர்பார்த்து,தான் எதிர்பார்த்தது நடக்காவிட்டால் மிகவும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.ஆனால் பலனில் பற்றில்லாதவர்கள் இப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பதில்லை.நமது கடமையை செய்துவிட வேண்டும்.பதிலுக்கு பிரதி பலனை எதிர்பார்க்க கூடாது. அதே நேரத்தில் நமது கடமையை செய்யாமலும் இருக்க கூடாது.

புதிதாக கர்ம பலன்களை உண்டு பண்ணாதே.ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் உண்டு.நமக்கு தேவையில்லாத பல செயல்களை செய்யும் போல அதற்கு தகுந்த எதிர்விளைவு உண்டாகிறது.உதாரணமாக நேர்மையாக உழைக்காமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் போது தேவையற்ற பல பிரச்சினைகள் எழுகிறது.இதனால் நமது கடமையை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகிறது

ஆனவே நமது கடமையை செய்ய வேண்டும்.அதன் பலனில் பற்றுவைக்க கூடாது.தேவையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.வேலை செய்யாமல் சும்மா இருக்கவும் கூடாது.

No comments:

Post a Comment