Friday, January 31, 2014

தங்கத்தை காலில் அணிந்தால்?

தங்கத்தை காலில் அணிந்தால்?

முன்னொரு காலத்தில் இருந்து முற்றிலும் அழிந்து போன ஒரு வியாதி உண்டு. அது பொண்ணுக்கு வீங்கி. அதாவது தங்க நகை போட்டுப் பார்க்கும் அள...விற்கு வசதி இல்லாமல், ஏக்கத்தில் வாடும் பெண்களுக்கு கன்னத்தில் வீக்கம் வரும். அப்படி வந்தால் அந்த பெண்ணுக்கு யாரது தங்க நகையை கழுத்தில் அனுவித்து விடுவார்கள். அந்த வீக்கம் மறைந்து போகும். இன்று விலை உச்சத்தில் இருந்தாலும் தங்கம் போட முடியாத அளவிற்கு தரித்திரம் யாரும் இல்லை. ஆனால் இந்த தங்கத்தை அணிந்து கொள்ள சில கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? தங்கத்தை மகாலக்ஷ்மியின் அம்சம் என்பார்கள். இந்த தங்கத்தை இடுப்புக்கு கீழே அணியக் கூடாது என்கிறது தர்மசாஸ்திரம். குறிப்பாக காலில் கொலுசாக அணியும் பழக்கம் சில பெண்களிடம் இருக்கிறது. தங்க கொலுசு போடும் அளவிற்கு வசதி இருந்தாலும் காலில் அணிந்தால், அடுத்த பிறவியில் தெருநாயாக பிறப்பார்கள் என்கிறது சாஸ்திரம். அத்துடன் முடிந்து விடாது. அடுத்து வரும் பிறவிகளில் தகரம் கூட அணிய முடியாத தரித்திரமாக பிறப்பார்கள் என்றும் சொல்கிறது.

No comments:

Post a Comment