Friday, January 31, 2014

ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதை விட, ஒரு அப்பாவி உயிருக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்குவதே மேலானது

ஒரு மேய்ப்பன், தன் ஆடுகளை விரட்டிச் சென்று கொண்டிருந்தான். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி ஆட்டின் கால் ஒடிந்திருந்தது. அதையும், மற்ற ஆடுகளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்கும் வகையில் உதை கொடுத்தபடியே சென்றான்.
அந்த வழியே புத்தர் வந்தார். காலுடைந்த ஆட்டின் நிலையைப் பார்த்து உள்ளம் உருகினார். அதைத் தூக்கிக் கொண்டு, மேய்ப்பவன் செல்லும் இடம் வரை சுமந்து சென்று விட்டு வந்தார்.
""ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதை விட, ஒரு அப்பாவி உயிருக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்குவதே மேலானது,'' என்று அறிவுரையையும், இந்த சம்பவம் மூலம் உலகுக்கு எடுத்துச் சொன்னார்.

No comments:

Post a Comment