Saturday, February 22, 2014

நாராயணனின் 24 திருநாமங்கள்

ராமாயணமும், மகாபாரதமும் பாரதத்தின் இரு கண்களாக போற்றப்படுகின்றன. இதில் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படும் மகாபாரதம், "மண்ணாசை கூடாது' என்பதை வலியுறுத்துகிறது. மகாபாரதப் போர் குரு÷க்ஷத்திரத்தில் முடிந்த சமயத்தில், பிதாமகரான பீஷ்மர் அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்தார். அப்போது கிருஷ்ணர், பாண்டவர்களை அவரிடம் அழைத்துச் சென்று, <உயிர்கள் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை எடுத்துரைக்க வேண்டினார். பீஷ்மரும் அதை ஏற்றுக் கொண்டார்.
"" நாராயணன் ஒருவனே நித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன் அவரை முழுநம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல சவுபாக்கியம் கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாக கிடைக்கும்'' என்று பீஷ்மர் உபதேசித்தார். அப்போது, இன்னொரு சுலபமான வழியையும் அவர்களுக்குக் கூறினார்.
""யார் ஒருவர் தினமும் நாராயணனின் 24 திருநாமங்களை(பெயர்களை) ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி, அஷ்ட ஐஸ்வர்யம், பொன், பொருள், தனதானியம், ஆரோக்கியம், நல்ல குடும்பம், குழந்தைகள், நல்ல புகழ், வாகனவசதி, வாழ்வில் ராஜயோகம் கைகூடும். பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணனின் திருவடிகளை அடையலாம்,'' என்றார்.
அந்த 24 நாமங்களும் மிகவும் எளிமையானவை. எல்லாரும், காலையில் நீராடியவுடனும், மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.
ஓம் கேசவாய நமஹ:
ஓம் சங்கர்ஷணாய நமஹ:
ஓம் நாராயணாய நமஹ:
ஓம் வாசுதேவாய நமஹ:
ஓம் மாதவாய நமஹ:
ஓம் ப்ரத்யும்னாய நமஹ:
ஓம் கோவிந்தாய நமஹ:
ஓம் அநிருத்தாய நமஹ:
ஓம் விஷ்ணவே நமஹ:
ஓம் புருஷோத்தமாய நமஹ:
ஓம் மதுசூதனாய நமஹ:
ஓம் அதோக்ஷஜாய நமஹ:
ஓம் திரிவிக்ரமாய நமஹ:
ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ:
ஓம் வாமனாய நமஹ:
ஓம் அச்சுதாய நமஹ:
ஓம் ஸ்ரீதராய நமஹ:
ஓம் ஜனார்தனாய நமஹ:
ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ:
ஓம் உபேந்த்ராய நமஹ:
ஓம் பத்மநாபாய நமஹ:
ஓம் ஹரயே நமஹ:
ஓம் தாமோதராய நமஹ:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ:
தினமும் இந்த மந்திரங்களை ஜபிக்கும்போது, துளசியும், சுத்தமான நீரும் நைவேத்யமாக வைத்து வழிபட்டால் போதும்.

No comments:

Post a Comment