Sunday, February 23, 2014

ஜாதியில்லை பேதமில்லை

ஜாதியில்லை பேதமில்லை

ஒருமுறை ஆதிசங்கரரை புலையன் ஒருவன் பின்தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் நெடியடித்தது.
மாமிசத்தைச் சுவைத்தபடி சங்கரரை நெருங்கினான். இதைக் கண்ட சங்கரர், ""டேய், விலகிப்போடா!'' என்று எச்சரித்தார். அவன் உடனே,""நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலகவேண்டும்?'' என்று எதிர்கேள்வி கேட்டான். அப...்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. "மநிஷா பஞ்சகம்' என்னும் பாடலைப் பாடினார். தன் பிழையை உணர்ந்து அந்தப் புலையனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது அங்கிருந்த புலையன், காசிவிஸ்வநாதராக மாறி காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியின் மூலம், ஜாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார்.

No comments:

Post a Comment