Monday, February 17, 2014

உலகத்திற்கு எப்பொழுது பிரளயம் ஏற்படும்?

உலகத்திற்கு எப்பொழுது பிரளயம் ஏற்படும்? நமது ஹிந்து சமயம் {வேதம்} என்ன சொல்கிறது! சுருக்கமான ஆய்வு அறிக்கை...

அவசியம் நண்பர்கள் நம்முடைய வேத காலக் கணக்கை தெரிந்துகொள்ள வேண்டும்

நாம் இந்த கலியுகத்தில் ஸ்வேத வராஹ கல்பத்தில் உள்ள ஸ்ரீ.வைவஸ்வத மந் வந்தரத்தில் வாழ்கிறோம். ...

நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் பதிநான்கு மன் வந்தரங்களில் மத்தியம பாகத்தில் ஏழாவது வைவஸ்வத மந்வந்தரத்தில் ஜீவிக்கிறோம். மேழும் ஏழு மன்வந்தரங்கள் நடந்து முடிந்தால் அதாவது மொத்தம் பதிநான்கு மன்வந்தரம் நடந்து முடிந்தால் தான், ஒரு கல்பம் எனப்படும்.

மச்சபுராணம் – 60வது அத்தியாயம் – யுகங்களின் அளவு என்ற பகுதியில் குறிப்பிட்டுள்ளதை இங்கு தந்துள்ளேன். நாம் கண்களால் கண் இமைக்கும் காலம். பதினெட்டு தடவை கண் இமைத்தால் அதற்கு ஒரு “ காஷ்டை “ எனப்படும். இவ்விதமே முப்பது காஷ்டை சேர்ந்த நேரத்திற்கு ஒரு – கணம் ஆகும். பன்னிரெண்டு கணம் நடந்தால் ஒரு முகூர்த்த காலமாகும்.

முப்பது முகூர்த்தம் சேர்ந்த காலம் ஒரு நாள் ஆகும். சூரியனது சஞ்சாரத்தில் பகல்/இரவு இரு காலங்கள் சேர்ந்தது ஒரு தினம். 7.நாட்கள் கொண்டது ஒரு வாரம் 15.நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம் இரண்டு பக்ஷம் {முப்பது நாட்கள்} சேர்ந்தது ஒரு மாதம், இரண்டு மாதங்கள் சேர்ந்தால் ஒரு ருது, 6.மாதங்கள் கொண்டது ஒரு அயனம், இரண்டு அயனங்கள் கொண்டது {12.மாதங்கள்} சேர்ந்தது ஒரு வருடம். மனிதர்களுடைய முப்பது வருஷம் தேவர்களுக்கு ஒரு மாதக்கணக்காகும்.

நாம் தற்பொழுது விஜய நாம வருஷத்தில் இன்று கலியுகம் பிறந்தது 5115-ம் ஆண்டில் வாழ்கிறோம். வேத உபநிஷத்துக்களின் படியும், ஜோதிட சாஸ்த்திரத்தின் படியாக- கலியுகத்தில் இன்னும் செல்ல வேண்டிய வருஷங்கள் நான்கு லக்ஷத்து இருபத்தாறு ஆயிரத்து என்னூற்றி என்பத்து ஐந்து அதாவது 426,885 வருடங்கள் செல்ல வேண்டும். சதுர்யுகங்களின் கணக்கை நாம் இப்பொழுது பார்ப்போம்.

1} முதலாவது – கிருதயுகம் – 17,28,000 மனுஷ ஆண்டுகள். இவ்யுகத்தின் ஆரம்பகால யுகசந்தி நானூறு வருஷம்.

2} இரண்டாவது – திரேதாயுகம் – 12,96,000 மனுஷ ஆண்டுகள். இந்த யுகத்தின் ஆரம்பகால யுக சந்தி – சந்தியாங்கிசம். 300 ஆண்டுகள்.

3} மூன்றாவது – துவாபரயுகம் – 8,64,000 மனுஷ ஆண்டுகள். துவாபரயுக ஆரம்ப சந்தியும் – கடைசி சந்தியாங்கிசமும் 200.ஆண்டுகள்.

4} நான்காவது – கலியுகம் – 4,32,000 மனுஷ ஆண்டுகள். ஆரம்பயுக சந்தியும்-கடைசி சந்தியாங்கிசமும் 100.ஆண்டுகள்.

ஆக ஒரு சதுர்யுகத்திற்கு மொத்தம் 43,20,000 ஆண்டுகள். இந்த நான்கு யுகங்கள் கொண்டதற்கு ஓர் சதுர்யுகம் என்று சொல்லப்படுகிறது.

71 – எழுபத்தி ஒன்று சதுர்யுகங்கள் கொண்ட காலத்திற்கு “ ஒரு மன் வந்தரம் “ என்று பெயர். இப்படி 14. பதிநான்கு மன்வந்தரங்கள் கொண்ட காலத்திற்கு – ஒரு கல்ப காலம் என்று வழங்கப்படுகிறது.

இந்த வேத கால கணக்குகளின்படி இரண்டு கல்ப காலம் நடந்து முடிந்தால் தான் உலக பிரளயம் உண்டாகும். இதன் மத்தியில் பிரளயம் உண்டாவதற்கு சாத்தியமே இல்லை.

சுருக்கமாக புரிந்துகொள்ள – 71. சதுர்யுகங்கள் அதாவது 284.யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரமாகும். {நான்கு யுகம்} ஓர் சதுர்யுகத்திற்கு மானிட வருஷம் நாற்பத்தி மூன்று லக்ஷத்து இருபதினாயிரம் ஆண்டுகள்.

71. சதுர்யுகத்திற்கு – 30,67,20,000 அதாவது முப்பது கோடியே ஆறுபத்தேழு லக்ஷத்து இருபது ஆயிரம் ஆண்டுகள்.

14.மனுக்களின் காலம் ஒரு கல்பம் எனப்படும். இதற்கு 434.கோடியே 40.லக்ஷத்து அறுபதினாயிரத்து முன்னூற்று இருபத்தேழு வருஷங்கள் கொண்டது என்று வேதகால் கணக்காகும். இதற்கு ஒரு கல்பம் எனப்படும் 434,40,60,327 ஆண்டுகள்.

இன்னும் புரியும்படியாக சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் - இப்போது உலகத்தில் நாம் ஏழாவது மன்வந்தரத்தில் வாழ்கிறோம். மேலும் ஏழு மன்வந்தரங்கள் கடந்தால் ஒரு கல்பம் ஆகும். இது பிரகாரம் இரண்டு கல்ப காலம் நடந்து முடிந்தால் தான் பிரளயம் ஆகும். பிரளயத்தில் உலகம் யாவும் நீரில் மூழ்கி விடும் என்று வேதம் நிர்ணயம் செய்கிறது. பிரளயத்திலேயே நான்கு தன்மை உள்ளது அதில் நான்காவது வரும் பிரளயமே மஹா பிரளயம் ஆகும் அது நெருப்பினால் சர்வ உலகம் அழிந்து போகும் அந்த கணக்கு இப்ப வேண்டாம்.

No comments:

Post a Comment