Saturday, February 22, 2014

...காசி சென்று வந்தால் ராமேஸ்வரம் செல்வதும கட்டாயமா?






வயதில் சிறியவர்களும் காசிக்குச் செல்லலாமா?
காசி மிகப் பெரிய சிவத்தலம். விசாலாட்சி, கால பைரவர், டுண்டி விநாயகர், தண்டபாணி என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கும் அற்புதத்தலம். வடக்கு நோக்கிப் பாயும் கங்கை நதிக்கரையில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. பெரியவர்கள் செல்லும்போது, அவசியம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது அவசியம். காசியைத் தரிசிப்பதுடன் தொல்பொருள் அருங்காட்சியகம், அரண்மனை என அங்கு காண வேண்டிய இடங்கள் ஏராளம். பயணத்தில் கஷ்டம் இருந்ததால், அந்தக் காலத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வது இயலாததாக இருந்தது. தற்போது ரயில், விமானம் என எல்லா வசதிகளும் இருப்பதால் ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்




காசி சென்று வந்தால் ராமேஸ்வரம் செல்வதும கட்டாயமா?
தேசமக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற உயர்ந்த தத்துவமே காசி- ராமேஸ்வர யாத்திரை. நாம் இங்கிருந்து காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசித்து அங்கிருந்து கங்கைநீரைக் கொண்டு வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வடநாட்டில் உள்ளவர்கள் ராமேஸ்வரம் வந்து, புனிதநீராடி ராமநாதரை தரிசித்து இங்குள்ள கடல் தீர்த்தத்தால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் யாத்திரை முழுமை பெறுவதோடு, தெய்வத்தின் திருவருளும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

No comments:

Post a Comment